TTV Dinakaran : உதயநிதி முதல்வரானால் என்ன நடக்கும்? டிடிவி தினகரன் என்ன சொல்றார் பாருங்க!

TTV Dinakaran About Udhayanidhi in Press Meet : உதயநிதி துணை முதல்வர் அல்லது முதல்வர் ஆனால் நாட்டிற்கு நல்லது நடக்குமோ நடக்காதோ எனத் தெரியவில்லை ஆனால் அவர்கள் வீட்டிற்கு வருமானமும் வசதியும் பெருகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Aug 3, 2024 - 15:01
Aug 3, 2024 - 16:04
 0
TTV Dinakaran : உதயநிதி முதல்வரானால் என்ன நடக்கும்? டிடிவி தினகரன் என்ன சொல்றார் பாருங்க!
TTV Dinakaran About Udhayanidhi in Press Meet

TTV Dinakaran About Udhayanidhi in Press Meet : அதிமுகவில் இணைவது என்பதற்கான வார்த்தைக்கு இடமில்லை; வருங்காலத்தில் கட்சியும் சின்னமும் வீழ்ச்சி அடைந்து பழனிச்சாமி என்கின்ற அந்த தீய மனிதரை தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டும் காலம் விரைவில் வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 

தமிழ்நாட்டில் எங்கு போதை மருந்து வியாபாரம், போதைப்பொருள் கடத்தல் நடந்தாலும் அதில் திமுகவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்களுடைய பாதுகாப்பிலும் உதவியிலும் தான் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக பல செய்திகளில் பார்க்கிறேன். இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு கிடையாது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுவது தவறு என்றும் கொலை கொள்ளைக்கு கூலிப்படையினர் எளிதாக கிடைப்பதற்கு சட்ட ஒழுங்கு கெட்டு உள்ளது என்பதுதான் உண்மை என்றும் தினகரன் தெரிவித்தார். 

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் கட்டண உயர்வு வந்துவிடும்.தனியாரிடம் கொள்முதல் செய்தால் தான் அதில் முறை கேடு செய்வதற்கு வழி உள்ளது என்றார்
உதயநிதி துணை முதல்வர் ஆன உடனே அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வர போகிறாரா..! மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜனநாயக ரீதியாக உரிமையுடன் போராடி உரிமையை பெறுவதற்கு கூட இந்த ஆட்சியில் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.. காரணம் ஊழல் முறைக்கேடுகள் பெருக்கெடுத்து இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது... இந்த நேரத்தில் உதயநிதி துணை முதல்வர் ஆனால் என்ன முதல்வர் ஆனால் என்ன, அவர் முதல்வரானால் நாட்டிற்கு எந்த நல்லது நடக்குமோ நடக்காதோ தெரியவில்லை ஆனால் அவர்கள் வீட்டிற்கு வேண்டுமானால் வருமானம் பெருக்குவது வசதிகள் பெருக்குவதும் நடைபெறும். 

எந்த சூழ்நிலையில் எந்த காரணத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதில் எந்த மாற்றமும் இல்லாத போது அதிமுகவில் இணைவது என்பதற்கான வார்த்தைக்கு இடமில்லை. எடப்பாடி ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார் அம்மாவின் கட்சிக்கு இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணமே பழனிச்சாமியின் துரோக சிந்தனையும் திமிர்த்தனமும் தான்.

வருங்காலத்தில் அந்த கட்சியும் சின்னமும் வீழ்ச்சி அடைந்து பழனிச்சாமி என்கின்ற அந்த தீய மனிதரை தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டும் காலம் விரைவில் வரும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow