புதன் பெயர்ச்சி பலன் 2024.. உச்சம் பெறும் புதன்.. பத்ர யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார்?
புதன் தனது சொந்த வீடான கன்னி ராசியில் வரும் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
புத்தி நாயகன் புதன் மனிதர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறார். நரம்பின் நாயகன் புதன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். புதன் வீடான கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார்.உச்சம் பெற்ற புதனால் சில ராசிக்காரர்களுக்கு பத்ர யோகம் கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமும் கைகூடி வரப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்:
மேஷம்: மேஷம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் உச்சம் பெறும் புதனால் பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்:
ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் புதனால் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் நன்மைகள் நடக்க மகாவிஷ்ணுவை சகஸ்ராநாமம் கூறி வணங்கலாம்.
மிதுனம்:
நான்காம் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் புதன் பகவானால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும்.உங்களுக்கு பத்ர யோகம் கிடைக்கப்போகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள்.
கடகம்:
முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமரப்போகும் புதன் பகவானால் புதிய முயற்சிகள் செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மை ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம். புதன்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபடலாம்.
சிம்மம்:
உங்கள் ராசியில் இருந்த புதன் பகவான் தன, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம்.
கன்னி:
புதன்பகவான் உங்கள் ராசி அதிபதி. தனது வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போவதால் பத்ர யோகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு வேலையில் ப்ரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.
What's Your Reaction?