ஆந்திரா மழை வெள்ளம்.... ரூ. 25 கோடியை அள்ளிக் கொடுத்த அதானி குழுமம்!

Adani Group Funds To Andhra Flood Relief : ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அதானி குழுமம் வழங்கியுள்ளது.

Sep 19, 2024 - 16:15
Sep 19, 2024 - 16:25
 0
ஆந்திரா மழை வெள்ளம்.... ரூ. 25 கோடியை அள்ளிக் கொடுத்த அதானி குழுமம்!
ஆந்திரா மழை வெள்ளம்.... ரூ. 25 கோடியை அள்ளிக் கொடுத்த அதானி குழுமம்!

Adani Group Funds To Andhra Flood Relief : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, விஜயவாடா, மொகல்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல், உப்பலா பகுதியில் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஆசிரியர், மாணவர்கள் என 3 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையில் மேலும் பலர் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் 37 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

இந்த நிலையில் ஆந்திராவில் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர்களின் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், ஜுனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ், சிம்பு உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். 

மேலும் படிக்க: மணிமேகலை ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவங்க.. ஷகிலா ஷாக்..நெட்டிசன்ஸ் கொந்தளிப்பு

இந்த வரிசையில் தற்போது அதானி குழுமம் ஆந்திரா வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow