K U M U D A M   N E W S

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

அரசியல் அமைப்பை பாதுகாக்க முன் வாருங்கள்.. 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

மசோதா கால நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் அரசியல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய 20 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலி கட்டிய 15 நிமிடத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு.. களையிழந்த திருமண நிகழ்வு

மணமகள் கழுத்தில் தாலி கட்டிய 15 நிமிடத்திற்குள் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளை விண்ணில் பாய்கிறது.. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்‌ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

மத்திய அரசின் புதிய முயற்சி: பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகளின் ஒத்துழைப்புக்கான குழு!

பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை IMF மறுபரிசீலனை வேண்டும் - ராஜ்நாத்சிங்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி என்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் என்பதால், அந்நாட்டிற்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்பை விமர்சித்து பதிவு.. கடுகடுத்த பாஜக தலைமை: மன்னிப்புக் கேட்ட நடிகை

புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பாஜகவினை சேர்ந்த எம்.பி-யுமான கங்கனா ரனாவத் டிரம்ப் குறித்த பதிவிட்ட பதிவினை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் கீழ் நீக்கியுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

e Passport : இனி ஏமாற்ற முடியாது.. இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்!

உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அடையாள செயல்முறைகளை மேம்படுத்தும் முயற்சியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) பதிப்பு 2.0 இன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் 36 நாட்கள்.. முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி.நாகரத்னா?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2027-ல் பதவியேற்கும் முதல் பெண் தலைமை நீதிபதி பி.வி.நாகரத்னா சுதந்திர இந்தியாவில், முதன் பெண் நீதிபதியாக பதவியேற்று அவர் வெறும் 36 நாட்கள் மட்டுமே பதவிவகிப்பார் என்ற நிலையில், பெண்கள் நீதிபதியாவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

பாகிஸ்தானுக்கு முப்படைகளும் தக்க பாடத்தை புகட்டியுள்ளது - மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்

எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்”...ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் குறித்து விபரங்கள் கேட்ட இளைஞர் கைது

பாகிஸ்தானுடனான போர் சூழலில் மர்ம நபர் தொடர்பு கொண்டு கப்பல் படையில் விவரங்கள் கேட்டதால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர்: நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதில் பல்வேறு தகவல்களை பகிர்வார் என்று கூறப்படுகிறது

போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் ஏன் முதலில் சொன்னார்? பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை சம்மந்தப்பட்ட இரு நாடுகள் தவிர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

போர் பதற்றம்: எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது...மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இந்தியா மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல்.. முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

India Pakistan War : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி: நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

India Pakistan War Update in Tamil: இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வானார் புதிய போப் லியோ XIV... முதன்முறையாக அமெரிக்காவை சேர்ந்த தேர்வு!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்

India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.