K U M U D A M   N E W S

இந்தியா

வைரலாகிய வீடியோ.. விவசாயி வாங்கிய கடனை மொத்தமாக அடைத்த அமைச்சர்!

75 வயதான விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு தன்னை தானே கருவியாக பயன்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், அவருக்கு நிலுவையில் இருந்த கடன் தொகையினை அடைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்.

சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தி ஸ்டிக்கர்? காங்கிரஸ் கட்சி விளக்கம்

கடந்து இரண்டு நாட்களாகவே காங்கிரஸ் கட்சி பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக, பீகாரில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சுவரில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம்.. வைரலாகும் ரசீது..!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம் செலவானதாக வெளியிடப்பட்ட ரசீது சர்ச்சை கிளப்பியுள்ளது.

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100-க்கு 257 மார்க்.. ஆனாலும் பெயில்: பீகார் பல்கலைக்கழக ரிசல்ட் பரிதாபம்!

பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி.. இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பங்கேற்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!

உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. பின்வாங்கியது டெல்லி அரசு

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி

முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!

நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

ஜூலை 21 முதல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் கைது…தீவிர விசாரணை

மணிப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர் | 3 terrorists roaming around with weapons in Manipur caught in a raid conducted by security forces

பள்ளி மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆசிரியைக் கைது

மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த பெண் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வேடனின் பாடல் - கேரள ஆளுநர் எதிர்ப்பு!

கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் தம்பதி.. தாகத்தால் உயிரிழந்த சோகம்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி தாக்கத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து – 6 பேர் பலி?

தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாக்கு பையில் கிடந்த பெண்ணின் உடல் – லிவிங் டுகெதர் உறவால் ஏற்பட்ட விபரீதம்

கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த சோகம்- கர்நாடகாவில் பரபரப்பு

4 பேரும் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் கோயில் லட்டுவில் ‘கரப்பான் பூச்சி’ என புகார்...பக்தர்கள் அதிர்ச்சி

பக்தர் அளித்த புகார் கடிதத்தில், ஊழியர்கள் அலட்சியமான லட்டுகள் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

மும்மொழிக்கொள்கையை ரத்து செய்த பாஜக அரசு...எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரீல்ஸ் மோகம்: இளைஞரை கொன்று ஐபோன் திருடிய 2 சிறுவர்கள்..!

இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.