K U M U D A M   N E W S

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. மாணவி மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞன்.. பரபரப்பு சம்பவம்!

ஹரியானா மாநிலத்தில், காதலை ஏற்க மறுத்த மாணவியை, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினச் சிறுவனைத் தாக்கி, பேன்ட்டுக்குள் தேளை வைத்த ஆசிரியர்கள்.. 3 பேர் மீது வழக்கு!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்களமாக மாறிய திருமண மண்டபம்.. சிக்கன் ஃப்ரைக்காக மோதிக்கொண்ட மணமகன் - மணமகள் வீட்டார்!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் ஃப்ரை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் - மணமகள் வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் குப்பை கொட்டினால் வீட்டு வாசலில் கொட்டுவோம்: பெங்களூரில் புதிய நடவடிக்கை!

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களின் வீட்டின் முன்னாலேயே அந்தக் குப்பையைக் கொட்டியதுடன், அபராதமும் விதித்துள்ளது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம்.

தமிழகத்தைத் தொடர்ந்து பீகாரிலும் காலை உணவுத் திட்டம்: என்டிஏ கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!

தமிழகத்தில் காலை உணவு திட்டம் அமலில் இருக்கும் நிலையில், பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் வேட்பாளர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 423 பேர் மீது குற்ற வழக்குகளில் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டலில் பில் கட்டாமல் ஓட்டம் பிடித்த கும்பல்.. டிராபிக் ஜாமில் சிக்கிய சம்பவம்!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ரூ. 10,900-க்கு சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிடிபட்டனர்.

இரு மாநிலங்களில் வாக்குரிமை? பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'ரீல்' ஆசையில் யமுனை ஆற்றில் விழுந்த பாஜக எம்எல்ஏ.. ஆம் ஆத்மி கிண்டல்!

டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொல்லை: "இது ஒரு பாடம்"- பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

மத்திய பிரதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலீஸ் எஸ்ஐ-ஆல் வன்கொடுமை.. உள்ளங்கையில் குறிப்பு எழுதி பெண் மருத்துவர் தற்கொலை!

மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் உள்ளங்கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்: முன்னாள் காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞர் தற்கொலை!

மும்பையில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருக்கு சவால் விட்ட 'சிக்மா கேங்'.. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள்!

போலீசாரால் மிகவும் தேடப்பட்ட 'சிக்மா கேங்' என்ற ரவுடிகள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இளைஞர்களின் விபரீத சாகசம்.. ஓடும் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்து அட்டூழியம்!

லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Gujarat Cabinet Reshuffle: குஜராத் அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி ரிவாபா!

கிரிக்கெட் வீரர் வீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்- ராகுல் காந்தி விமர்சனம்!

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பீகார் தேர்தலில் போட்டியில்லை.. கட்சி அமைப்பை வலுப்படுத்த முடிவு- பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் சோகம்: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சினிமாவுக்கு திரும்ப விரும்புகிறேன்.. வருமானம் குறைந்துவிட்டது'- சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு!

தான் அமைச்சர் பதவியை விரும்பவில்லை என்றும் சினிமா வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

கேரளாவில் அதிர்ச்சி.. கழுத்தில் கத்தியுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர்!

கேரளாவில் நடந்த ஒரு சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்ட நபர், அந்தக் கத்தி கழுத்திலேயே குத்திய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி: கடவுள் சொல்லித்தான் செய்தேன்- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காக வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: வெள்ள நிவாரணப் பணியின்போது பாஜக தலைவர்கள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.