K U M U D A M   N E W S

விளையாட்டு

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!

மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை: ஒரே பந்தில் வெற்றி! சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Asia Cup 2025: இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

சூப்பர்-4 சுற்றில் முதல் போட்டியில் தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேற வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்!

ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. ராபின் உத்தப்பா அமலாக்கத்துறை முன் ஆஜர்!

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.

பிசிசிஐயின் புதிய தலைவர்.. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் தேர்வாகிறாரா?

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய ஸ்பான்சர்: டிரீம்11-க்கு பதிலாக அப்போலோ டயர்ஸ்!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் ₹579 கோடி மதிப்பில் பிசிசிஐ புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கைகுலுக்க மறுத்த இந்திய அணி: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்!

இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.

Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்!

துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரம்.. ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இங்கிலாந்தில் ஃபிட்னஸ் டெஸ்ட் எடுத்த விராட் கோலி.. மீண்டும் சர்ச்சையில் பிசிசிஐ!

இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை 2025.. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி பரிசுத்தொகை - ஐசிசி அறிவிப்பு!

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘RCB CARES’ - கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் புதிய நிவாரணத் திட்டம்!

சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

ஆன்லைன் கேமிங் மசோதா: ட்ரீம் 11 எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பிசிசிஐ!

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cheteshwar Pujara: டெஸ்ட் போட்டிக்காகவே செதுக்கிய சிலை.. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு!

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஏலம்: பெயரை ரிஜிஸ்டர் செய்த 13 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக்கின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க, பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல் மற்றும் அங்கித் ராஜ்பூட் உட்பட 13 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.