K U M U D A M   N E W S
Kumudam Ad

விளையாட்டு

இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்.. கழட்டிவிடப்பட்ட முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய U-19 அணியின் கேப்டனாக CSK வீரர்.. சுட்டிக்குழந்தை சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமையான இன்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) அணியினை அறிவித்துள்ளது. இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான போட்டிகள் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?

விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!

இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பார்முக்கு திரும்பிய பிரக்ஞானந்தா: சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்று அசத்தல்!

கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.

வான்கடேவில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட் திறப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

இராணுவத்தில் உயர்பதவி.. கெளரவ லெப்டினன்ட் கர்னலாகிறார் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் வேலை.. 2 மகள்கள்.. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பெண்!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? அஸ்வினின் விருப்பம் இவரா?

ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.