K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் – முதல்வரிடம் உதவி கோரி வீடியோ

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை முதலமைச்சர் சீரழித்துள்ளார் - எல். முருகன் விமர்சனம்

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சீரழித்து செயல்படாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோட்டூர்புரம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள்.. அறநிலையத்துறை அளவீட்டு பணி தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை பெற்ற குற்றவாளி ஞானசேகரன் கட்டியுள்ள வீடு கோயில் நிலத்தில் அமைந்துள்ளது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து கோட்டூர்புரத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

அரசியலுக்கு நான் கும்பிடு போட்டு விட்டேன் - நடிகர் அருண்பாண்டியன்

சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், அரசியலுக்கு நான் கும்பிடு போட்டு விட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மருதமலை கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் சுவாமி தரிசனம்!

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. ஜூலை 3 வரை இலங்கை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷ்ணு விஷால் தயாரிப்பில் 'ஓஹோ எந்தன் பேபி': ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு!

விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் கைது- ஜெய்சங்கருக்கு முதலமைசர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சுபான்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால்பதித்த முதல் இந்தியர்!

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம், ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் ஃபால்கான்-9 ராக்கெட்டை விண்ணில் ஏவப்பட்டது.

நியூயார்க் மேயர் தேர்தல்.. இந்திய வம்சாவளி வேட்பாளரை கடுமையாக சாடிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் பதவிக்காக போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் – NHAI மறுப்பு விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? புன்னப்புழா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்.. சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற 64-வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மீட்டில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.