K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அட்ராசிட்டி செய்யும் நடிகர் சூரியின் தம்பி.. ஆட்சியரிடம் புகாரளித்த நபரால் பரபரப்பு

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பை விட 90% அதிகம்.. 2 தினங்கள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு.. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொள்ளையன்!

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மண்ணின் கீழ் மறைந்துள்ள வரலாறு.. ஆவணப்படுத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!

தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மதுரையில் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அச்சம்!

heavyrain,madurai,மதுரை,கோடைமழை,வானிலை,Motorists are scared,due to water flowing on the road

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி.. ஏற்பாடுகள் தீவிரம்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்

மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி..!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் சில நாட்களில் 62-வது மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில் மலர்கள், கொய்மலர்கள், காய்கறி வகைகள் காட்சிபடுத்தும் அரங்குகள், ஸ்டால்கள், அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் முறைகேடு.. 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி ஏசி யோஜானா: இலவசமா 5 ஸ்டார் ஏசியா? மக்களே உஷார்!

தமிழக அரசு இலவச ஏசி தருவதாகவும், பிரதமர் திட்டத்தில் இலவச ஏசி வழங்குவதாகவும் போலி விளம்பரங்கள் இணையதளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றி வருகின்றன. இலவச ஏசி பெற வீடியோவில் காணும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடும் நிலையில், இதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இன்ஸ்டா பழக்கம்.. ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் நகைகளை வழங்கிய பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த அப்டேட்!

எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.

எதிர்பாரததை எதிர்பாருங்கள்.. முடிவுக்கு வந்த வெயில்காலம்.. தொடங்கிய மழைக்காலம் – பிரதீப் ஜான்

கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்தனர்.

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கேள்வி எழுப்பிய ஜனாதிபதி.. கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்..! என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு, தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் 'குடியரசுத் தலைவருக்கு' தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டென்று மாறிய வானிலை: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வீட்டு வரி உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம், வீட்டு வரி ஆகியன உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.