K U M U D A M   N E W S

தமிழ்நாடு

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி குறையும் - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொளத்தூர் நில மோசடி: ரூ.1.5 கோடி இடத்தை அபகரிக்க முயன்ற பிரபல தியேட்டர் உரிமையாளர் கைது!

கொளத்தூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில், பிரபல தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் இளஞ்செழியன் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்தனர்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

நீலகிரிக்கு ஆரஞ் அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் கலக்கம்!

சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், தங்கத்தின் விலை இன்று (அக். 8) இரண்டாவது முறையாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,080 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்கள் காசாவைப் பற்றிக் கவலைப்படுவது ஏன்? - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்குக் கடிதம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.