K U M U D A M   N E W S

தமிழ்நாடு

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது மலர்க்கண்காட்சி!

தமிழகம் முழுவதும் கோடை வெயிலியின் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கிறது.

இஸ்ரேலிய திரைப்பட விழா: தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு

இஸ்ரேலிய திரைப்பட விழா தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி: சவரனுக்கு ரூ.280 குறைவு!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையாகிறது; ஒரு கிராம் தங்கம் ரூ.8940க்கு விற்பனையாகிறது.

ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!

தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!

ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.