K U M U D A M   N E W S

ஆன்மிகம்

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா.. மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு..!

அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டைக் கண்டு பக்தர்கள் பரவசத்தில் திளைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பங்கேற்பு!

பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்: கிரேனில் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா- பக்திப் பரவசத்துடன் கொடியேற்றம்!

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியும், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுமான தேரோட்டம், வருகிற ஜூலை 8-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

திருச்செந்தூர் முருகன்: தெரிந்த கோயில்.. தெரியாத விஷயங்கள்

வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்த தெரியாத பல விஷயங்களை இப்பகுதியில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருபகவானின் ஆதிக்கம் மிக்க வியாழக்கிழமையில் பிறந்தவரா நீங்கள்? பலன் விவரங்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் பக்ரீத் சிறப்புத் தொழுகை- ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

சனிக்கிழமையன்று பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பிரத்யேக பலன்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

மேஷம் முதல் கன்னி ராசி நேயர்களே.. உடலில் இந்த பிரச்னைகள் வரலாம்!

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (5.6.2025 - 18.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

பெண்களுக்கான ராசிபலன்: இந்த ராசியினருக்கு பதவி உயர்வு நிச்சயம்!

குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

திருப்பதி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வார ராசிபலன்: சூதானமா இருங்க துலாம் முதல் மீனம் ராசிக்காரர்களே

weekly horoscope predicted by astrologer shelvi: துலாம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (28.5.2025 - 3.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

இதை செய்தால் 6 ராசிக்கும் வெற்றி உறுதி: ஜோதிடர் ஷெல்வீயின் வார ராசிபலன்

weekly horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (28.5.2025 - 3.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

எலிகளுக்கு தான் காணிக்கை- ராஜஸ்தானில் விசித்திரமான கோயில்!

ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலில் எலிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.

அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. நாளை மறுதினம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Today Rasipalan- மே 26: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிப்பலன்!

ஒவ்வொரு நாளும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகங்களின் நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் அமைகின்றன.

பெண்களுக்கான ராசிபலன்: இந்த ராசியினருக்கு எல்லாம் ஜாக்பாட்!

குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற மே 28 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை மேஷம் முதல் மீனம் வரை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

சலிப்பே சிந்தனை.. புலம்பலே வாழ்க்கைன்னு இருந்த சிம்மம் ராசி நேயர்களே.. குட் நியூஸ்!

சிம்மம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

பால் நீல நிறமாகும் அதிசய சிவன் கோயில்- எங்கே இருக்கிறது?

சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வடகலை - தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.