விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
இந்த கோயிலுக்குச் சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இந்த கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது இதனால் சித்தர்களின் சொர்க பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலுக்கு தற்பொழுது தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரி கோவிலுக்கு விருதுநகர் , மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு கோயில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி எனவும், பக்தர்கள் கோயில் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
இந்த கோயிலுக்குச் சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இந்த கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது இதனால் சித்தர்களின் சொர்க பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலுக்கு தற்பொழுது தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரி கோவிலுக்கு விருதுநகர் , மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு கோயில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி எனவும், பக்தர்கள் கோயில் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.