K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

மதுரையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

 கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலர் மீது தாக்குதல் நடத்தியதால், காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். 

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா.. குதிரை ஆட்டத்துடன் தேரோட்டம்!

அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு குதிரை ஆட்டத்துடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தகுதி வாய்ந்தவர்களுக்கு மூன்று மாத்தில் மகளிர் உரிமைத்தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் உரிய விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம்.. வேறு நபருக்கு பட்டா!

திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தவறுதலாக வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரம்ஜானுக்காக சிறப்பு போஸ்டர்.. வாழ்த்து தெரிவித்த ‘ரெட்ரோ’ படக்குழு!

ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘ரெட்ரோ’ படக்குழு, மே 1ம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை.. உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கம்

ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.

பிரதமரின் தனிச் செயலர்.. IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்!

பிரதமர் மோடியின் தனி செயலராக, இளம் பெண் IFS அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதி திவாரி நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.

நீலகிரியில் நாளை முதல் இ-பாஸ் நடைமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரியில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார். வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டி.. தமிழக அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை!

தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில், தமிழக பெண்கள் கபடி அணியினர் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்த கபடி வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

IPL 2025: மும்பை சொந்த மண்ணில் முதல் வெற்றி பெறுமா? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்!

டி20 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பெறுவதற்கு போராடி வருகிறது. அதே போல் 3 முறை கோப்பைகளை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான கொல்கத்தா அணி, தங்களுடைய 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 2 பலம் வாய்ந்த அணிகளும் மோதும் போட்டி என்பதால், இன்றையப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.