K U M U D A M   N E W S

விளையாட்டு

18 வயதில் செஸ் போட்டியில் வரலாற்று சாதனை: ஊக்கத்தொகை வழங்கி நேரில் வாழ்த்திய முதல்வர்

FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

ஐ.பி.எல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா

சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

நான் ஓய்வு பெற போவதில்லை.. நடப்பது அப்படியே தொடரும்.. ரோகித் சர்மா அதிரடி முடிவு!

தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுப்படுத்திய ரோகித் சர்மா, எதிர்காலத்தில் என் ஓய்வு குறித்து எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

சாம்பியன் டிராபி 2025: இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து

2025 சாம்பியன் டிராபி தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

IND vs NZ: 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றிய இந்தியா..!

சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி தனது 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றியது.

IND vs NZ: இந்தியா அபார பந்து வீச்சு.. 251 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டிய இந்தியா..

துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு  252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.  

IND vs NZ: மீண்டும் மீண்டுமா..? சாதனை படைத்த இந்தியா.. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு..!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்து வரலாற்றில் புதிய சாதனையைப் படைந்துள்ளார்.  

Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!

Sunil Chhetri Return India Team: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மீண்டும் சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள பணியாற்றுவேன்.. ரஹானே உறுதி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025: KKR சார்பில் 3 நட்சத்திரங்களுக்கு பெயர் பதிவு: ஜெர்சியிலும் புதிய அங்கீகாரம்!

பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.

ரஞ்சி டிராபி 2025.. சதமடித்த கருண் நாயர்..  சாம்பியன் பட்டம் வென்றது யார்?

ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் விதர்பா, கேரளா அணி மோதிய நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரிட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

Champion Trophy: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி - ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்

தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

India vs Pakistan: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி...!

Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

மனைவியை அழைத்து வரலாம் ஆனால் ஒரு கண்டிஷன்! கிரிக்கெட் வீரர்களுக்கு BCCI ஆர்டர்...

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....

ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டி.. தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா பும்ரா..? வெளியான முக்கிய அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மகளிர் டி20 உலக கோப்பை.. இந்திய அணி அபார வெற்றி.. தாயகம் திரும்பிய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்பிய வீராங்கனை கமலினிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் நடந்தது என்ன..? வெளியான பகீர் தகவல்..!

பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீராங்கனைகள், சென்னை திரும்பிய நிலையில், அங்கு நடந்தது குறித்து அவர்கள் சொன்ன தகவல் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசியின் சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி' விருதை வெல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.