மணிமேகலை ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவங்க.. ஷகிலா ஷாக்..நெட்டிசன்ஸ் கொந்தளிப்பு

Manimegalai vs Priyanka Deshpande Controversy : பிரியங்கா தப்பு என்றால் மணிமேகலையும் தப்புதான்... மணிமேகலை மட்டும் சரியா? அவரும் ஓடிப்போய் கல்யாணம் செய்தவர் தானே? என்று நடிகை ஷகிலா கேள்வி எழுப்பி உள்ளது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

Sep 19, 2024 - 16:06
Sep 19, 2024 - 16:15
 0
மணிமேகலை ஓடிப்போய் கல்யாணம் பண்ணினவங்க.. ஷகிலா ஷாக்..நெட்டிசன்ஸ் கொந்தளிப்பு
vj anchors manimegalai vs Priyanka deshpande

Manimegalai vs Priyanka Deshpande Controversy : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறியதற்கு காரணம் பிரியங்கா என்று அவருடைய பெயரை சொல்லாமல் ஒரு தொகுப்பாளர் என்று தன்னுடைய பதிவில் வெளியிட்டு இருந்தார் மணிமேகலை. அதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பிரியங்காவிற்கு ஆதரவாக நடிகை ஷகிலா கருத்து கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. 

சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான மணிமேகலை(Manimegalai) விஜய் டிவிக்கு மாறிய பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி(Cook with Comali) நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக கலந்து கொண்டது அவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கி கொடுத்தது. ஆனால் கடந்த நான்காவது சீசனில் இருந்து அவர் வெளியேறி இருந்தார். பிறகு தொகுப்பாளராக அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இப்போது ஐந்தாவது நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக தொடர்ந்து கொண்டிருந்தார் மணிமேகலை.ஐந்தாவது சீசனில்  வெங்கடேஷ் பட் மற்றும் அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் வெளியேறி விட்டனர். செஃப் தாமு,மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையிலான அணி 5வது சீசனை நடத்தியது.  மணிமேகலை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரக்ஷனுடன் இணைந்து பயணம் செய்தார். 

கடந்த வாரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட மணிமேகலை,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன். அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர்தான். அவர் ஆரம்பத்தில் இருந்து என்னை என்னுடைய வேலையை சரியாக செய்ய விடாமல் தடுக்கிறார். அவர்தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார் என்று அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மணிமேகலை பெயர் குறிப்பிடாமல் பேசியது பிரியங்காவை(Priyanka Despande) தான் என்று எல்லோரும் பிரியங்காவை திட்டுகின்றனர். பிரியங்கா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இப்போது பிரியங்காவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.  நடிகை ஷகிலாவும் பிரியங்கா மற்றும் மணிமேகலை விஷயத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். 

ஷகிலா ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான். தற்போதைய ஐந்தாவது சீசனிலும் இரண்டு எபிசோடில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியுள்ளார் ஷகிலா. மணிமேகலைக்கு பிரியங்கா மீது பொறாமை. நம்மை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நம்மை விட நிறைய ப்ரோக்ராம் செய்கிறார் என்று நினைக்கிறார்.

மணிமேகலையால் பிரியங்காவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரியங்கா அயர்லாந்து போகிறார் என்றால் அவருடைய வருமானத்தில் போகிறார். பிரியங்கா மட்டும் அயர்லாந்துக்கு போவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்கும் ரசிகர்கள் மணிமேகலை புதியதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறாரே அந்த வீடு கட்ட எப்படி பணம் வந்தது என்று கேட்கலாமே. 

பிரியங்காவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று சிலர் அவருடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார்கள். மணிமேகலை மட்டும் அப்போ சரியா? மணிமேகலை அவருடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு ஓடிவந்து தானே கல்யாணம் பண்ணி இருக்கிறார். ஓடி வந்து கல்யாணம் பண்ணி இருக்கிறது சமூகத்துக்கு நல்ல உதாரணமா? இவங்களை உதாரணமாக காட்ட முடியுமா? நம்மை வீட்டு பெண்களை இதுபோல நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று யாராவது உதாரணமாக காட்ட முடியுமா?

பிரியங்கா தப்பு என்று சொன்னால் மணிமேகலையும் தப்புதான் என்று ஷகிலா பேசியிருக்கும் நிலையில் இது சமூக வலைத்தளங்களில் அதிகமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow