வக்ஃப் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு.. உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Sep 19, 2024 - 13:30
 0
வக்ஃப் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு.. உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

தமிழக வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருந்த எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த ஐயுஎம்எல் கட்சிக்கு வக்பு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின், வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான விவகாரம், வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரம் ஆகியவை சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, வக்ஃப் வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.

கடந்த செப்.13 ம் தேதி அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வக்ஃப் வாரியத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஐயுஎம்எல் மற்றும் மனித நேய மக்கள் கட்சியும் போட்டி போட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில துணை தலைவருமான நவாஸ் கனி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow