வாஸ்து டிப்ஸ்.. ஓயாத குடும்ப சண்டை.. கண் திருஷ்டி காணாமல் போக கற்றாழை பரிகாரம்
சென்னை: நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது.
2. அதிர்ஷ்டம் தரும் கற்றாழை:
கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். அது அதிஷ்டத்தையும் தரக்கூடிய செடி. ஆலோவேரா என்று அழைக்கப்படும் இந்த கற்றாழை செடியை நாம் வீட்டில் நிலை வாசலுக்கு முன்பாக கட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டி ஏற்படாது. எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்டு வரும் சண்டை சச்சரவுகள் நீங்கும்.
What's Your Reaction?