வாஸ்து டிப்ஸ்.. ஓயாத குடும்ப சண்டை.. கண் திருஷ்டி காணாமல் போக கற்றாழை பரிகாரம்
சென்னை: நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது.
1. பணப்பிரச்சினை தீர பரிகாரம்:
பணப்பிரச்சினை பலரையும் பாடாய் படுத்துகிறது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு கையில் வாங்கி பையில் போடக்கூட முடியாத அளவிற்கு நெருக்கடிகள் உள்ளது. பணப்பற்றாக்குறை குடும்பத்தில் சண்டை சச்சரவை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை தீர எளிமையான பரிகாரம் உள்ளது.
What's Your Reaction?