வாஸ்து டிப்ஸ்.. ஓயாத குடும்ப சண்டை.. கண் திருஷ்டி காணாமல் போக கற்றாழை பரிகாரம்
சென்னை: நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது.
3. மகிழ்ச்சி அதிகரிக்கும்:
கிராமங்களில் வீட்டு வேலிகளை சுற்றி கற்றாழை செடியை நட்டு வளர்ப்பார்கள். பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்கு நுழையாமல் தடுக்கவே கற்றாழை வளர்த்தனர். வீடு தினம் தினம் சண்டை சச்சரவுடன் போர்க்களமாக இருக்கிறதா? கட்டாயம் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். இதன் மூலம் சண்டை நீங்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
What's Your Reaction?