வாஸ்து டிப்ஸ்.. ஓயாத குடும்ப சண்டை.. கண் திருஷ்டி காணாமல் போக கற்றாழை பரிகாரம்
சென்னை: நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது.
4. நேர்மறை ஆற்றல்:
கற்றாழை செடியின் அருமை தெரிந்துதான் இன்றைக்கு பலரும் அதனை வீடுகளில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். துளசி செடி போல கற்றாழை செடியையும் பலரும் தொட்டிகளில் வளர்க்கின்றனர். வாஸ்துபடி சரியான திசையில் கற்றாழை செடியை வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
What's Your Reaction?