குரு பெயர்ச்சி பலன் 2024.. ரிஷப ராசியில் வக்ரமடையும் குரு.. அஸ்வினி முதல் ரேவதி வரை லக் யாருக்கு?
குருபகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு வக்ர பெயர்ச்சியால் அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் அக்டோபர் 9ஆம் தேதி புரட்டாசி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரைக்கும் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்வார். குருவின் வக்ர பயணத்தால் சில ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் உள்ள அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அஸ்வினி: சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். பண வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பரணி: நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும் புது வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.
கார்த்திகை: குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாம்.
ரோகிணி: குடும்பத்தில் நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில் புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வும் அதிகரிக்கும்.
மிருகஷீரிடம்: குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுப நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும்.
திருவாதிரை: பண வருமானம் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
புனர்பூசம்: தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றமும் கிடைக்கும்.
பூசம்: குரு பகவான் பண வருமானத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். லாப குருவினால் இதுநாள் வரை இருந்த கஷ்டங்கள் கவலைகள் நீங்கும்.
ஆயில்யம்: சுபகாரியங்கள் செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
மகம்: செல்வமும், செல்வாக்கும் தேடி வருகிறது. வீடு கட்ட மனை வாங்கலாம். புது வீட்டு கட்டலாம் பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பூரம்: வேலையில் புரமோசன் கிடைக்கும் சம்பள உயர்வும், இடமாற்றமும் தேடி வரும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும்.
உத்திரம்: நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ஹஸ்தம்: புகழும், பெருமையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
சித்திரை: பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். லாபத்தை அள்ளித்தரும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
சுவாதி: பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப்போகிறது. கடன்கள் தீரும். குடும்பத்தில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும்.
விசாகம்: கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை.
அனுஷம்: வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும்.
கேட்டை: குருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கப்போகிறது. சுப செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
மூலம்: சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் அகலும் வருமானம் அதிகரிக்கும். குரு பகவானின் அருளால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
பூராடம்: பண வருமானம் பல வழிகளிலும் வரும். கடன்கள் அடைபடும். நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். சுப காரியங்கள் அதிகம் முறையில் நடைபெறும்.
உத்திராடம்: குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும்.
திருவோணம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வழக்குகள் சாதகமாக முடியும். பணம் பல வழிகளிலும் திரும்ப வரும்.
அவிட்டம்: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் ஜெயமாகும். தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பண விசயத்தில் கவனம் தேவை.
சதயம்: குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை. இடம் பொருள் அறிந்து பேசினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும்.
பூரட்டாதி: துன்பங்களும், துயரங்களும் நீங்கும் காலம் வந்துவிட்டது. பணப்பிரச்சினைகள் தீரும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது.
உத்திரட்டாதி: புதிய வீடு, கட்டிடங்களை கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
ரேவதி: முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
What's Your Reaction?