சென்னை ஏர்போர்ட்டில் வந்து விழுந்த கேள்வி.. விரலை நீட்டி சுர்ரென்று கோபப்பட்ட ரஜினி
அரசியல் தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வேட்டையன் படம் நன்றாக வந்திருப்பதாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்ட உடன் கோபத்தோடு விரலை உயர்த்திய ரஜினிகாந்த் அரசியல் கேள்வி எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கோபத்தோடு கூறினார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இன்றைய தினம் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக இன்றைய தினம் நடைபெற உள்ள விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பங்கேற்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடாவில் நடக்கும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இன்றைய தினம் காலையில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் சிரித்துக்கொண்டே வந்தார் ரஜினிகாந்த். ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுத்தனர். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழாவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்று கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த் யார் கலந்து கொள்கிறார்கள் என்று தெரியாது என்றார்.
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பாரா என கேட்டதற்கு உடனே கோபப்பட்ட ரஜினிகாந்த், விரலை உயர்த்தி அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள் என்று சொல்லி உள்ளேன் என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. மலேசியா வாசுதேவன் பாடியது நல்லா இருக்கிறது கூலி படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டு பின்னர் காரில் எறி வேகமாக வீட்டிற்கு சென்றார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் தினசரியும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. நல்ல நாள் பார்த்து உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செய்தியாளர்கள் பலரும் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரிடமும் உதயநிதி துணைமுதல்வராவது பற்றிய கேள்வியை எழுப்புகின்றனர். இன்றைய தினம் ரஜினிகாந்திடம் கேட்டதற்கு அவர் கண்களில் கோபம் கொப்பளிக்க பதில் அளித்துவிட்டு சென்றுள்ளார்.
What's Your Reaction?