வாஸ்து டிப்ஸ்.. ஓயாத குடும்ப சண்டை.. கண் திருஷ்டி காணாமல் போக கற்றாழை பரிகாரம்
சென்னை: நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது.
5. பதவி உயர்வு:
பல ஆண்டு காலம் ஒரே பதவியில் இருந்தாலும் வருமானம் அதிகரிக்கவில்லை பதவி உயர்வு எதுவும் கிடைக்கவேயில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு கற்றாழை செடி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாஸ்துபடி கற்றாழை செடியை கிழக்கு, வடகிழக்கு திசையில் வளர்த்து வர மன அமைதியை அதிகரிக்கும். வீட்டின் மேற்கு திசையில் கற்றாழை செடியை வளர்த்தால் வேலையில் முன்னேற்றமும் பதவி உயர்வும், பண வருமானமும் அதிகரிக்கும். எதையும் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல செய்தி தேடி வரும்.
What's Your Reaction?