Kanavu Palangal : இறந்து போன மனைவி கனவில் வந்தால் கோடீஸ்வர யோகம் தேடி வருமா? கனவு சாஸ்திரம் சொல்வதென்ன?

Kanavu Palangal Predictions in Tamil : இறந்துபோன மனைவி, மேல் உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கை நிம்மதியாக அமையும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால் அவருடைய நோய் விரைவில் குணமாகும்.

Aug 2, 2024 - 07:12
Aug 3, 2024 - 10:12
 0
Kanavu Palangal : இறந்து போன மனைவி கனவில் வந்தால் கோடீஸ்வர யோகம் தேடி வருமா?  கனவு சாஸ்திரம் சொல்வதென்ன?
Kanavu Palangal Predictions in Tamil

Kanavu Palangal Predictions in Tamil : கனவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் சிலருக்கு பயத்தையும், பலருக்கு பரவசத்தையும் தருகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவுகள் தோன்றுவதே உண்மையான கனவுகள் ஆகும். அப்படிப்பட்ட கனவுகளுக்கு உரிய பலன்களைத் தான் சொப்பன சாஸ்திரம் சொல்கிறது. நல்ல கனவுகள், கெட்ட கனவுகள் எவை என்று கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எந்த கனவு எப்போது பலிக்கும்:

இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும், விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. எல்லோரும் கனவுகளை கலர் கலராக வருவதில் சிலருக்கு கருப்பு வெள்ளையில் வரும் ஏன் சிலருக்கு மட்டும் கனவுகள் கருப்பு வெள்ளையாகவும், சிலருக்கு வண்ணமாகவும் வருகின்றன என்பதை யாராலும் கூற முடியவில்லை.

சாமி தரிசனம்

கோயிலைக் கனவில் கண்டால் நன்மைதான். வியாபாரம் தொழில் வளர்ச்சியடையும். புனித யாத்திரைக்கு செல்லப்போவதை உணர்த்துகிறது. கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவது போல  கனவு வந்தால் ஈடுபடும்  செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும். ஆனாலும் தெய்வத்தின் அருளால் முடிவில் செயல் நன்மையாகவே முடியும். அதே நேரத்தில் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் காண்படு நேர்மாறான பலன்களைத் தரும். புதிய முயற்சிகளில் தோல்வியும் பொருள் நஷ்டமும் ஏற்படும் என்பதை அந்த கனவு உணர்த்துகிறது.

தேவதையை கண்டால்:

தேவலோகப் பெண்களை கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். மணமான மங்கையர் இந்த கனவைக் கண்டால் பொருள் வரவு உண்டு. தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வரும்.

அரசியல்வாதிகள் தொடர்பு

அரசியல்வாதிகள், பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். அரச குடும்பத்தாருடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.மணமாகாத இளம்பெண் இந்த  கனவைக் கண்டால், அவளை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம்.

கனவில் சண்டை

சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு கண்டால் அவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டை நடைபெறும் இடத்தில் பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இல்லை என்று கூறலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து நண்பர்களாக மாறுவார்கள்.

உடம்பில் காயம்படுவது நல்லதா

தனக்கு அபாயமும் தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால் பலன் நேர்மாறாக நிகழும். அவரது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியானதாக மாறும். தான் அடிபட்டு காயமடைந்ததாகக் கனவு கண்டால் பொருள் அபிவிருத்தி ஏற்படக்கூடும். அதே நேரத்தில் கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நல்லதல்ல பழி  வந்து சேரும்.


தொழில் நஷ்டம்:

விருந்து படையல் போட்டு தனியாக சாப்பிடுவதாக கனவு கண்டால் பிரிவு ஏற்படும். தொழில் நஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவு அதிகமாகும். பலருடன் சேர்ந்து விருந்து சாப்பிடுவது  போல் கனவு கண்டால் உயர்வுதான். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள் விருந்து சாப்பிடுவதாகக்  கனவு கண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


நண்டு கனவு நல்லதா?

கனவில் நண்டைக் கண்டால்  நாம் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படும் அந்த செயல் வெற்றி பெறாது. கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் எனலாம். ஆனால், சீப்பால் தலை வாரிக் கொள்வதுபோல கண்டால், காரிய வெற்றி ஏற்படும். கடலில் பயணம் செல்லும் மாலுமிகள் கனவில் நண்டை கண்டால் கப்பலுக்கு பேராபத்தாக முடியும். வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் சிலந்தி வலை பின்னியிருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் வரப்போவதை உணர்த்துகிறது.

குழந்தை கனவு

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வரப்போகின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும். தன்னுடைய மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். இறந்துபோன மனைவி, மேலுலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கை நிம்மதியாக அமையும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால் அவருடைய நோய் விரைவில் குணமாகும். 

கோடீஸ்வர யோகம் தரும் கனவு

கனவில் எலும்பைக் காண்பது விசேஷம். சதைத்திரள் ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் பணக்காரர் ஆவார். மனிதரின் எலும்பைக் கண்டால் முன்னோர்கள்  வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும். பற்கள் உடைவது அல்லது விழுவது போல கனவு கண்டால் ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் குறிக்கும். தான் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் தொழில் அபிவிருத்தியடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow