ஆம்ஸ்ட்ராங் கொலை.. மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி டிரான்ஸ்பர் செய்த ரூ.75 லட்சம்.. காரணம் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி கொடுத்த ரூ. 75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Aug 21, 2024 - 16:30
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை.. மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி டிரான்ஸ்பர் செய்த ரூ.75 லட்சம்.. காரணம் என்ன?
armstrong murder case nelson wife monisha

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர். மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பிசென்று விட்டார். அவருடன் போனில் அடிக்கடி பேசியதாக திரைப்பட  இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நெல்சன் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல முன்னணி கட்சிகளின் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுன்ட்ரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவ்வாறு அடுத்தடுத்து விசாரணை வளையத்திர்குள் பலர் சிக்கி சிறையில் அடைக்கப்ப்ட்டுள்ளனர்.இந்நிலையில் அரசியல் கட்சியினர்கள் தொடர்ந்து சிக்கி வந்த இந்த வழக்கில் கோலிவுட் பிரபலங்கள் தற்போது விசாரனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பீஸ்ட், ஜெய்லர் திரைப்படங்களை இயக்கிய பிரபல தமிழ் இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் மனைவி மோனிஷாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக  காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி மோனிஷா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மொட்டை கிருஷ்ணனுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தில் தற்போது நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக இயக்குனர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நெல்சன் மனைவி மோனிஷா தனது வங்கி கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணத்தை தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 75 லட்சம் பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற  கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். 

மோனிஷா எதற்காக இவ்வளவு பெரிய தொகையை மொட்டை கிருஷ்ணனுக்கு அனுப்பினார் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்தது. அது குறித்து மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ரூ. 75 லட்சம் பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர்  விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow