மாடர்ன் உடையில் யங் லுக்.. பிலிம்பேர் விருது விழாவில் அசத்திய ஜோதிகா.. அசந்து போன ரசிகர்கள்

பிலிம்பேர் விருது விழாவில் பங்கேற்ற ஜோதிகா கறுப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கலாக வந்திருந்தார். யங் லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் அசந்து போய் கமெண்ட்களை பறக்க விடுகின்றனர்.

Aug 7, 2024 - 11:16
 0
மாடர்ன் உடையில் யங் லுக்.. பிலிம்பேர் விருது விழாவில் அசத்திய ஜோதிகா.. அசந்து போன ரசிகர்கள்
actress jyothika

69வது பிலிம்பேர் விருது விழாவில் பங்கேற்க வந்த நடிகை ஜோதிகா மாடர்ன் லுக்கில் படு ஸ்டைலிஸ் ஆன உடையில் வந்திருந்தார். கருப்பு நிற மாடர்ன் உடையில் வந்திருந்த ஜோதிகாவின் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.சென்னையில் இருந்த போது குடும்ப குத்துவிளக்கு போல இருந்த ஜோதிகா மும்பைக்கு சென்ற உடன் படு மாடர்னாக மாறி விட்டாரே என்று கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர் ரசிகர்கள். 

மும்பையை சேர்ந்த ஜோதிகா தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார்.  ஒட்டு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகினார். தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

36 வயதினிலே படத்தின் நாயகியாக ஜோதிகா நடித்தார். இந்த படத்தை, சூர்யா தன்னுடை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இப்படம் ஜோவுக்கு ஸ்டாங் கம்பேக்காக அமைத்ததோடு, வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.இந்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த ஜாக்பார்ட், மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, உடன் பிறப்பே, போன்ற திரைப்படங்களில் வெற்றி பெற்றார்.

ஜோதிகா தனது வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா தனது குடும்பத்தினரோடு தற்போது மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.இவரது நடிப்பில் வெளியான, சைத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவரின் கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது. மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

நீண்ட காலத்திற்கு பிறகு ஜோதிகா மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரியாகி மாதவனுடன் சேர்ந்து ஷைத்தான் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து பாலிவுட் படத்தில் கமிட்டாகி வருகிறார். ஜோதிகா மட்டுமில்லாமல் சூர்யாவையும் பாலிவுட்டில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 69வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஜோதிகாதான் இணையதளங்களில் அதிகம் பேசப்படுகிறார். அந்த அளவிற்கு படு ஸ்டைலிஸ் ஆக மாடர்ன் உடையில் வந்திருந்தார் ஜோதிகா. ஜோதிகாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள்... இரண்டு குழந்தைக்கு அம்மா இவர் என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் 46 வயதாகிறது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow