Virudhunagar Firecrackers Factory Blast : விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 2 பேர் உடல் சிதறி மரணம் - போர்மேன் கைது

Virudhunagar Firecrackers Factory Blast Accident : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் போர்மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aug 14, 2024 - 12:52
Aug 15, 2024 - 09:55
 0
Virudhunagar Firecrackers Factory Blast : விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 2 பேர் உடல் சிதறி மரணம் - போர்மேன் கைது
Virudhunagar Firecrackers Factory Blast Accident

Virudhunagar Firecrackers Factory Blast Accident : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி யில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து இருவர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்து குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பட்டாசு ஆலை போர்மேன் பாலமுருகனை  கைது செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயத்தேவன் பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில்  நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் தங்கள் பணிகளை தொடங்கும் போது ரசாயன கலவைகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில்  மூன்று அறைகள் சேதமடைந்துள்ளது. 

சம்பவ இடத்திலேயே கார்த்திக், புலி குட்டி என்ற இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வெடி விபத்து குறித்து மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow