Parliament : புதிய நாடாளுமன்றத்துக்குள் கொட்டிய மழை நீர்! பக்கெட் வச்சி புடிக்கிறாங்க.. மத்திய அரசு தந்த விளக்கம்
Water Leakage Inside in Parliament New Building Lobby : நாட்டில் பல பகுதிகளிலும் இப்போது கனமழை கொட்டி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் மழை நீர் தேங்கியது. நாடாளுமன்ற லாபியில் நீர் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்கே பக்கெட் ஒன்றை வைத்தே மழை நீர் ஊழியர்கள் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இது தொடர்பாக லோக்சபா செயலகம் விளக்கமளித்துள்ளது.
Water Leakage Inside in Parliament New Building Lobby : நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. திடீரென கொட்டிய மழையில் சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்தில் மழை வெள்ளம் பாய்ந்ததில் 3 பேரே உயிரிழந்தனர்.நேற்றைய தினம் காலை டெல்லியில் 1 மணி நேரத்துக்கும் மேல் கனமழை கொட்டியது.. சுமார் 1 மணி நேரத்தில் சுமார் 112.5 மிமீ மழை கொட்டிய நிலையில், பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த கனமழையால் டெல்லி நாடாளுமன்ற வளாகமும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது.
நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சாலைகள், நாடாளுமன்ற வளாகத்தின் உள்பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நாடாளுமன்றத்தின் உள்ளே, லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டது. இதை அங்கிருந்த ஊழியர்கள் பக்கெட் வைத்துப் பிடித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
இதனை விருதுநகர் நாடாமன்ற தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் எப்படி மழைநீர் கசிவு ஏற்பட்டிருக்கிறது? என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய அனைத்து கட்சி எம்பிக்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை அவசர முக்கியத்தும் அளித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Paper leakage outside,
water leakage inside. The recent water leakage in the Parliament lobby used by the President highlights urgent weather resilience issues in the new building, just a year after completion.
Moving Adjournment motion on this issue in Loksabha. #Parliament pic.twitter.com/kNFJ9Ld21d — Manickam Tagore .B
What's Your Reaction?