Today Rasi Palan: இன்றைய ராசிபலன் - ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் ஆசி யாருக்கு கிடைக்கும்
ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடக ராசியில் பயணம் செய்யும் சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 19ஆம் நாள் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
அமாவாசை திதி மாலை 04.40 மணி வரை அதன் பிறகு பிரதமை திதி. பூசம் நட்சத்திரம் பகல் 1.26 மணி வரை அதன் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்கள் ஆசி கிடைக்கும் நாள். இன்று சந்திரனின் பயணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். பூர்வீக சொத்துகளை கையகப்படுத்துவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை மாற்றுவீர்கள். உறவினர்களை விருந்துக்கு அழைத்து மரியாதை செய்வீர்கள்.
ரிஷபம்
முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாக்குவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள்.
மிதுனம்
சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண வருமானம் அதிகரிக்கும். சகோதர உறவுகளால் மன சஞ்சலம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் பயனடைய மாட்டீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள்.
கடகம்
சந்திரன் சூரியன் இணைந்து உங்கள் ராசியில் பயணம் செய்வதால் மனதில் லேசான குழப்பம் இருக்கும். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க ஆயத்தமாவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். முன்னோர்களின் ஆசி கிடைக்கும் நாள்
சிம்மம்
விரைய ஸ்தானத்தில் சூரியன் சந்திரன் இணைந்து பயணம் செய்கின்றனர். எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். பண வருமானம் அதிகரித்தாலும் கூடவே செலவுகளும் வரும்.
கன்னி
லாப ஸ்தான சந்திரன் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபத்தை கொடுப்பார். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். ரியல் எஸ்டேட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். திடீர் பயணங்களால் எதிர்பாராத நபர்களை சந்திப்பீர்கள்.
துலாம்
தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். அரசு, தனியார்துறை பணியாளர்களுக்கு எதிர்பாராத தகவல் வரும். தாறுமாறாக பணப்புழக்கம் அதிகரித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள்.
விருச்சிகம்
பாக்ய ஸ்தான சந்திரன் பக்குவப்படுத்துவார். பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு பிரகாசமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை காண்பீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து நல்ல விலைக்கு விற்பீர்கள்.
தனுசு
மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். பண விசயத்தில் கவனம் தேவை வாயை கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். இன்று சந்திராஷ்டம நாள் கவனமாக இல்லாவிட்டால் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
மகரம்
சந்திரனும் சூரியனும் இணைந்து உங்கள் ராசிக்கு நேர் எதிரே பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் உறவினர்களை அடையாளர் காண்பீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை மிகவும் சிரமப்பட்டு திருப்பிச் செலுத்துவீர்கள். முன்னோர்களின் ஆசியால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பொன் நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
மீனம்
சந்திரன் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள தேடி வரும். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள்.
What's Your Reaction?