பயிரை மேயும் வேலிகள்.. காவல்துறையை கரைப்படுத்தும் காக்கிகள்.. அலறும் பப்ளிக்

தனிமையில் இருக்கும் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்துள்ளனர் காவல்துறையை சேர்ந்த இருவர். ஒரு சில காக்கிகள் செய்யும் தவறினால் பொதுமக்கள் நேர்மையானவர்களை கூட தவறான நினைக்க வேண்டியுள்ளது.

Sep 4, 2024 - 21:38
 0

தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனிமையில் உள்ள ஜோடிகள்,மது அருந்துபவர்கள் வீடியோ எடுத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்ட காவலர் உட்பட இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார் (38) ,மணிவண்ணன் (33) தாம்பரம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,

நேற்று முன் தினம் இரவு இருவரும்  ரயில்வே யார்ட் அருகே மது அருந்தி கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தாங்கள் போலீசார் என கூறி இருவரையும் லத்தியால் அடித்ததுடன் மிரட்டி 4,000 பணத்தை பறித்து கொண்டு சென்றதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,

புகாரின் பேரில் வாகனத்தை எண்ணை கொண்டு பீர்க்கன்காரனை தலைமை காவலர் அருள்ராஜ் (46) மற்றும் முன்னாள் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றிய சதீஷ் (31) என்பதும் தெரியவந்தது,

இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரனையில் இது போன்று இரவில் தனிமையில் இருக்கும் ஜோடிகள்,மது அருந்துபவர்கள்,திருநங்கைகள் உடன் செல்பர்களை ஆகியோரை குறி வைத்து வீடியோ எடுப்பதுடன் பல ஆயிரக்கணக்கான பணத்தை பறித்து சென்றதாக ஒப்புகொண்டனர். அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் பணியில் உள்ளவரே இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஈடுபட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow