ADMK Jayakumar : அந்த ஆசை வேறு முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கா? ஜெயக்குமார் ஏன் அப்படி கேட்டார்?

ADMK Jayakumar About CM Stalin in Chennai : முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் என்ன ஹிட்டன் அஜண்டா(Hidden Ajanta) இருக்கிறது என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Aug 3, 2024 - 12:19
Aug 3, 2024 - 15:04
 0
ADMK Jayakumar : அந்த ஆசை வேறு முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கா?  ஜெயக்குமார் ஏன் அப்படி கேட்டார்?
D.jayakumar

ADMK Jayakumar About CM Stalin in Chennai : தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தீரன் சின்னமலை உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. கடுமையான மின்சார கட்டண உயர்வு. இதனால் தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது.

மீன்பிடி தொழில் பாதுகாப்பாக இல்லை.  கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300 மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோற்கடிக்கப்பட்ட ஒரே காரணத்தால் இலங்கை கடற்பறையினால் இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு தமிழ்நாடு அரசின் மீது பயமில்லை. மீனவர்களின் மீது நடைபெறும் தாக்குதலை தடுப்பதற்கு விடியா திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடிதம் எழுதுவதில் மட்டுமே ஸ்டாலின் உடைய பணி நின்று விடுகிறது. போதிய அழுத்தத்தை பிரதமரிடமோ நாடாளுமன்றத்திலோ கொடுப்பதற்கு திமுக தவறிவிட்டது. மத்திய மாநில அரசுகள் மீனவர்களை காக்க தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஆர்.என். ரவியின் பதவிகாலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா, அல்லது ஆர்.என்.ரவியின் பதவிகாலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆளுநர் பதவி நீட்டிப்பது குறித்து ஸ்டாலின், நான் என்ன பிரதமரா குடியரசுத் தலைவரா என்று தெரிவித்துள்ளார். இந்த ஆசைவேறு ஸ்டாலினுக்கு இருக்கிறதா? ஆளுநருக்கு மீண்டும் பதவி கொடுப்பது மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், "நான் ஜனாதிபதியும் இல்லை.. பிரதமரும் இல்லை" என்று பதில் அளித்தார். முதல்வர் ஸ்டாலினின் பதிலுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow