குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: வக்ர குருவின் பார்வையால் தீபாவளிக்குப் பின் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
Guru Vakra Peyarchi Palan 2024 in Tamil : குருபகவான் அக்டோபர் 9ஆம் தேதி வக்ரமடையப்போகிறார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை வக்ர நிலையில் பயணம் செய்வார் குருபகவான்.
Guru Vakra Peyarchi Palan 2024 in Tamil : குருபகவான் இன்னும் சில மாதங்களில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குருவின் பயணம், பார்வை, வக்ர சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. திருமணம், சுபகாரியம் யாருக்கு நடைபெறும், பொற்காலம் யாருக்கு என்று பார்க்கலாம்.
துலாம்:
குரு பகவான் (Guru Peyarchi) அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருபகவான் 12 ஆம் பாவத்தை பார்வையிடுவதால் இது வரை தடைப்பட்ட சுபகாரியங்கள் மளமளவென நடைபெறும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் பொருளாதார நிலை உயரும். வங்கி சேமிப்புகள் உயரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். செய்யும் தொழிலில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். வேலையில் உள்ள அலைச்சல் காரணமாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் கவனம் தேவை.
விருச்சிகம்:
குருபகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரே அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு பகவான் தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். குரு பகவான் பார்வையால் 2025ஆம் ஆண்டிற்குள் சுபகாரியம் நடைபெறும்.
தனுசு:
குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்கள் ராசிநாதன் குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரய செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீடு மனை. வாங்கும் வாய்ப்பு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜீவசமாதிகளில் தரிசனம் செய்வது நல்லது.
மகரம்:
குரு பகவான் ஜந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். திருமணம் நடைபெறும். குழந்தை பேறு உண்டாகும். லாப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். எதிர்பார்த்த பதவி உயர்வும் சம்பள உயர்வும்
கும்பம்:
4ஆம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் உங்களை சுகப்படுத்துவார். உங்கள் ராசிக்கு பத்தாம் பாவத்தை குரு பார்ப்பதால் தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய வியாபாரம் லாபத்தை தரப்போகிறது. உத்யோக உயர்வு பதவி உயர்வு தேடி வரப்போகிறது. கடன் பிரச்சினையால் தூக்கம் இல்லாமல் நிம்மதியை தொலைத்தவர்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள்.
மீனம்:
ராசி அதிபதி குரு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போவதால் செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். புதிய யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் அமைதியும் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.
What's Your Reaction?