குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: புரட்டாசிக்குப்பின் குரு எந்த ராசிக்காரர்களை புரட்டி எடுக்கப்போகிறார்?
Guru Vakra Peyarchi Palangal 2024 : புரட்டாசி மாதத்தின் இறுதியில் குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போவதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையை புரட்டி போடப்போகிறது.
Guru Vakra Peyarchi Palangal 2024 : நிகழும் மங்களகரமான புரட்டாசி மாதம் 23ஆம் தேதி குருபகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குருவின் பயணம், பார்வை, வக்ர சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்:
உங்களுடைய ராசிக்கு தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்வதால் வேலையில் இருப்பவர்களுக்கு லாபமும் புரமோசனும் கிடைக்கப்போகிறது. வயதானவர்களுக்கு, ஆயுள் பலம் நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ராஜயோகமும் பதவியும் தேடி வரப்போகிறது.
ரிஷபம்:
ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்யும் சுப காரியங்களை வேகப்படுத்துவார். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். புத்திரபாக்கியம் கைகூடி வரப்போகிறது. அடுத்த மாதங்களுக்கு ராஜாதி ராஜயோகம் தேடி வரப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.
மிதுனம்:
விரைய குரு காலத்தில் விபரீத யோசனைகள் தோன்றும். கஷ்டங்கள், கவலைகள் மறையும், தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்று விட்டது என்ற நிலை ஏற்படும். இது மாதிரியான காலகட்டங்களில் உங்களுடைய தாயை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் எதிரியை பகைத்துக் கொள்ள வேண்டாம். குரு பகவான் உங்களுக்கு நிறைய பண வருமானத்தையும் சுப விரைய செலவுகளையும் தரப்போகிறார்.
கடகம்
லாப குரு வக்ர நிலையில் பயணம் செய்வதால் எதிர்பாராத பணவருமானம் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். பங்குச்சந்தை, ஊக வணிகம், தொழில் முதலீடு செய்பவர்கள், வெறும் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கும் தொழில்கள் அனைதிற்குமே இது ஒரு மகத்தான காலமாகும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
சிம்மம்
குரு கர்ம மற்றும் தொழில் ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்வதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். குரு கண்டிப்பாக சிறந்த பலன்களை தருவார். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுகங்கள் வீடு மனை வாங்குவதற்கு பண வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தன லாபங்களும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
கன்னி
உங்கள் ராசியில் கேது அமர்ந்திருக்க குரு பாக்கிய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குரு வக்ர பெயர்ச்சி காலத்திலும் உங்களுடைய வாழ்க்கையில் அதிசயங்கள் நடைபெறப்போகிறது.
What's Your Reaction?