Vazhai Remedies : வாழையடி வாழை.. குலம் தலைக்க.. சுப காரியம் நடக்க செவ்வாய்கிழமையில் பரிகாரம் பண்ணுங்க

Vazhai Remedies in Tamil : திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை உள்ளவர்களுக்கு எத்தனையோ விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும் வீட்டிலேயே செய்யக்கூடிய அதிக செலவில்லாத எளிய பரிகாரம் உள்ளது அதை பார்க்கலாம்.

Aug 27, 2024 - 07:15
Aug 27, 2024 - 14:56
 0
Vazhai Remedies : வாழையடி வாழை.. குலம் தலைக்க.. சுப காரியம் நடக்க செவ்வாய்கிழமையில் பரிகாரம் பண்ணுங்க
spirituality remedies

Vazhai Remedies in Tamil : எந்த ஒரு சுபகாரியம் என்றால் வாழை மரத்தை தோரணமாக வீட்டு வாசலில் கட்டுவார்கள். குடும்பமும் வம்சமும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காகவே வாழை மரம் வீட்டு வாசலில் கட்டப்படுகிறது. வாழை மரத்தை வைத்து சில பரிகாரங்கள் செய்தால் சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. 

அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, நாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசி விட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த நோய்கள் வறுமைகள் படிப்படியாக விலகத்தொடங்கும். 

ஒருவரது வீட்டில் பித்ரு தோஷம் இருக்கும். இதனால் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும். 100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதனை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.

சம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் தேவையற்ற செலவுகள் வராது. அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து வணங்கினால் செல்வம் பெருகும்.

வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிதளவு பாலை ஊற்றி 45 நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி வணங்கி வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பத்தில் வளம் பெருகும், பணம் வீண் விரையம் ஆகாது, தெய்வ குறைகள் இருந்தாலும் விலகும், திருமணம் சுபகாரியம் நடைபெறும் குலம்  விருத்தி அடையும்.

வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுப நாளிளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி வெட்டி மூன்று அங்குலம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டு மஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு வாழைப்பழம் தேன் கலந்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டு, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள முருகனுக்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதையை கரண்டியால் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் நன்மைகள் நடைபெறும். அதிக பணம் செலவில்லாத இந்த பரிகாரங்களை செய்து பாருங்களேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow