குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: வக்ர குருவின் பார்வை விழும் ராசிக்காரர்கள்.. புது வேலை கிடைக்குமா?
Guru Vakra Peyarchi Palangal 2024 : குரு பகவான் ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் வக்ரமடைவார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் பின்னர் நேர்கதியில் திரும்பி மே மாதத்தில் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார்.
Guru Vakra Peyarchi Palangal 2024 : நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். அக்டோபர் 09ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார் குரு பகவான்(Guru Bhagavan). 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகும் குருபகவானின் பார்வை எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது? வக்ர குருவின் பயணம் மற்றும் பார்வையால் பலனடையும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
குரு வக்ர பெயர்ச்சி:
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள்(Guru Vakra Kaalam
மேஷம்:
இரண்டாம் வீட்டில் குரு பகவான் ராகு உடன் வக்ர(Guru Vakra with Raghu) கதியில் பயணம் செய்வதால் புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். புரமோசனுடன் சம்பள உயர்வும் தேடி வரும்.. உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். செப்டம்பர் 4ஆம் தேதிக்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும், மனைவி வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும்.
கன்னி:
ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான். வக்ரகதியில் பயணம் செய்யப்போவதால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும்.உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.உற்சாகமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்:
உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டில் குரு பகவான் வக்ரநிலையில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் மாதம் முதல் சிலருக்கு திடீர் பணவருமானம் வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை வக்ர நிலையில் பார்ப்பதால் உங்கள் கனவுகள் நனவாகும் நேரம் வந்து விட்டது.புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்குள் நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும்.
மகரம்:
குரு பகவானின் பார்வை(Guru Bhagavan) உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அக்டோபர் மாதம் முதல் உங்களின் செல்வ வளம் அதிகரிக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்கள் விறுவிறுவென நடைபெறும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும். உங்களின் அழகும் ஆரோக்கியமும் கூடும். பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
What's Your Reaction?