கெட்ட பார்வை.. எதிர்மறை சக்தியை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்.. மகிழ்ச்சி பரவும்

நம்முடைய வீட்டில் சில நேரங்களில் எதிர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். கெட்ட சக்திகளின் பார்வையை கட்டுப்படுத்தவும், நேர்மறை சக்தியை அதிகரிக்கவும் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

Sep 4, 2024 - 17:54
 0
கெட்ட பார்வை.. எதிர்மறை சக்தியை  விரட்ட இந்த ஒரு பொருள் போதும்.. மகிழ்ச்சி பரவும்
evils eye issue astrological remedies

சென்னை: நம்முடைய வீட்டில் சமையலுக்கு தாளிக்க கடுகு பயன்படுத்துவோம். அந்த கடுகு கறுப்பு நிறத்தில் இருக்கும். வெண்கடுகு எனப்படும் ஒரு பொருள் கண் திருஷ்டியை நீக்கி எதிர்மறை சக்தியை போக்கும். கெட்ட சக்திகளின் பார்வை இருந்தாலும் கூட வெண்கடுகு ஓட ஓட விரட்டுமாம்.சாம்பிராணியுடன் வெண் கடுகு தூபம் போட சண்டை சச்சரவுகள் நீங்கும் தீய சக்திகளின் பார்வைகள் நீங்கி நல்ல நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் அதிகரிக்கும்.  

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கண் திருஷ்டியால் சிலருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும். ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

ஒருவரின் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் இருக்கும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் இந்த பாதிப்புகள் நீங்க நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். 

வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட கல் உப்பையும் காய்ந்த மிளகாயும் பயன்படுத்துவார்கள். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். 

இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அப்படி மாற்றும்போது கல் உப்பு, எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாயை எடுத்து ஆறு, குளம் கடல் நீர் அல்லது ஓடும் நீரில் விட்டுவிடலாம். தண்ணீரில் போட முடியாதவர்கள்  இந்த  மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.

இதேபோல தீய சக்திகளை விரட்ட வெண் கடுகு அருமையான பொருள். இது தெய்வீகத் தன்மையைக் கொண்டது. வெண் கடுகு பைரவரின் தேவ கணம் ஆகும்.
வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபம் போடும் போது சிறிதளவு வெண் கடுகை  போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளுக்கும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட வேண்டும் பின்னர் பூஜை அறையில் அந்த தூபத்தை வைப்பது நல்லது. இதன் மூலம் கண் திருஷ்டி காணமல் போகும். எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow