செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024: ரிஷப ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் செவ்வாய்.. தேடி வரும் கோடீஸ்வர யோகம்

Sevvai Peyarchi Palan 2024 : குரு உடன் மங்களகாரகன் செவ்வாய் இணைவது குரு மங்கள யோகமாகும். வீரத்தின் நாயகனான செவ்வாய் பகவான் இன்று (ஜூலை 12) முதல் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு உடன் கூட்டணி சேர்ந்து அமர்ந்து குரு மங்கள யோகத்தை தரப்போகிறார் செவ்வாய் பகவான். செவ்வாய் குரு கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Jul 12, 2024 - 17:55
Jul 13, 2024 - 10:19
 0
செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024: ரிஷப ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் செவ்வாய்.. தேடி வரும் கோடீஸ்வர யோகம்
Sevvai Peyarchi Palan 2024

செவ்வாயுடன் குரு கூட்டணி:

Sevvai Peyarchi Palan 2024 : நவகோள்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள். குருவிற்கு நண்பர் செவ்வாய். இருவரும் கூட்டணி அமைத்து ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ இந்த யோகம் ஏற்படும். குருவிற்கு 4,7,10 ஆம் இடங்களில் செவ்வாய் அமர்வது குரு மங்கள யோகமாகும். இயற்கை பாவ கிரகமான செவ்வாய் சுபத்துவம் அடைந்து நன்மை தருவார். இந்த யோகம் உள்ளவர்கள் விளையாட்டு, ராணுவம், காவல்துறையில் சிறந்து விளங்குவார். சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். 

மேஷம்:

உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குடும்ப உறவுகளிடையே உற்சாகம் பிறக்கும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.பொறுமையும் நிதானமும் தேவைப்படும். 

ரிஷபம்: 

செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள குரு உடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்வதால்  உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. செவ்வாய் நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு நிலம் வாங்குவதற்கு நல்ல தருணம்.   ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக பார்ப்பதால்   மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. குரு மங்கல யோகத்தால் நல்ல காலம் பிறந்து விட்டது வெற்றி  நடைபோடுங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும். 

மிதுனம்:

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் மறையப்போகிறார். அதிக கோபம் ஆபத்தில் முடியும் என்பதால் கவனம் தேவை. நிலம், வீட்டு மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். உங்களின் வேலையில் பிறரை தலையிட விட வேண்டாம். குறை சொல்பவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம். இரவு நேர பயணத்தை தள்ளிப்போடுங்கள்.

கடகம்: 

உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் இன்று முதல் நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.  செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பணவருமானம் அதிகரிக்கும். குரு மங்கல யோகத்தால் உங்களுக்கு பதவியில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும். 

சிம்மம்: 

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது  ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள்.  நிலம், வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. 

கன்னி: 

Chevvai Peyarchi Palan செவ்வாய் பகவான் ஒன்பதால் வீட்டில் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் அதிர்ஷ்டம் தேடி வரும். அரசு தேர்வு எழுதச்செல்பவர்ளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பணிசெய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

துலாம்: 

செவ்வாய்  உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் குரு உடன் இணைந்துள்ளதால் வேலை செய்யும் இடத்தில் கடுமையாக உழைக்க நேரிடும். எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.  ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிதானம் அவசியம்.

விருச்சிகம்: 

ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் ராசிநாதன் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் வீட்டில் வாழ்க்கைத்துணையிடம் வாயைக் கொடுக்காதீர்கள். எங்கும் எதிலும் புத்திசாலித்தனமாக நடப்பது நல்லது. ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து உங்களை பார்வையிடுவதால் காதல் மலரும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடங்கள் நீங்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும்.

தனுசு: 

செவ்வாய் பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் குரு உடன் இணைந்து பயணம் செய்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். (Chevvai Peyarchi Palan) புதிய வேலைக்கு மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.

மகரம்: 

செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு உடன் பயணம் செய்வதால் உங்களுக்கு பூர்வ புண்ணிய பலன் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். வழக்கு விவகாரங்களில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை.

கும்பம்: 

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் வீடு நிலம் வாங்குவதில் யோகம் தேடி வரும்.  கணவன் மனைவி இடையேயான பிரச்சினை தீரும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் பணம் தேடி வரப்போகிறது பத்திரப்படுத்துங்கள்.

மீனம்: 

செவ்வாய் 3ம் வீட்டில் குரு உடன் பயணம் செய்வது அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. தொட்ட காரியங்கள் துலங்கும்.  பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.குரு மங்கள யோகத்தால் குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow