ஆடி மாதத்தில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம்.. பார்த்தாலே அதிர்ஷ்டம்.. என்னென்ன நன்மைகள்
ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் அன்பு என்பவர் கொத்து கொத்தாக பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. பிரம்ம கமல மலர் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது. தமிழ் மாதங்களில் ஆடி, ஆவணியில் இந்த பூக்கள் பூக்கும்.
4. நோய்களை குணப்படுத்தும் பிரம்ம கமலம்
பிரம்ம கமல பூவில் உள்ள ரைசோம்கள், பூக்கள் மற்றும் இலைகள் ஆகியவை இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பூவின் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகள் சுவாசக்குழாயில் அழற்சியைக் குறைக்க உதவும் மற்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தைத் தடுக்க உதவுகிறது. இதனால் இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கவும், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிற சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பிரம்ம கமலமலர் உதவுகிறது.
பிரம்ம கமல மலரில் உள்ள கிருமிநாசினி பண்புகள் காயங்கள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். காயங்களுக்கு பயன்படுத்தப்படும் போது, மலர் அந்தப் பகுதியில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் இரத்தப்போக்கு நிறுத்தப்பட்டு, புண் குணப்படுத்தலில் உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.உடலில் இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது.இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது பிரம்ம கமலமலர்.
What's Your Reaction?