ஆடி மாதத்தில் பூத்து குலுங்கும் பிரம்ம கமலம்.. பார்த்தாலே அதிர்ஷ்டம்.. என்னென்ன நன்மைகள்

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் அன்பு என்பவர் கொத்து கொத்தாக பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. பிரம்ம கமல மலர் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது. தமிழ் மாதங்களில் ஆடி, ஆவணியில் இந்த பூக்கள் பூக்கும்.

Aug 7, 2024 - 10:18
 0
பிரம்ம கமல மலர்களின் புராண முக்கியத்துவம்
2 / 5

2. பிரம்ம கமல மலர்களின் புராண முக்கியத்துவம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் பூக்கும் இந்த பிரம்ம கமல பூக்கள் மகாவிஷ்ணுவிற்கும், சிவபெருமானுக்கும் வைத்து வணங்குவார்கள்.நம்முடைய வீட்டில் பிரம்ம கமல செடியை வளர்ப்பதால் அதிர்ஷ்டமும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். இந்த மலர் அழகாக மட்டுமல்லாமல், இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிப்பதில் முதல், பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது வரை அற்புதமான மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளது.

பிரம்ம கமல மலர் அழிந்து வரும் ஒரு மலர் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் அலங்கார மதிப்பு, உயர் மருத்துவ நன்மைகள் மற்றும் புராண முக்கியத்துவம் காரணமாக, இந்த மலர் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளால் அல்லது உள்ளூர்மக்களால் விரும்பப்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி விகிதம் குறைந்து, இவற்றின் வளர்ச்சி இமயமலைப் பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. மேலும், அதன் சட்டவிரோதமாக இந்த மலர்களை கடத்தல் போன்றவை காரணமாக, பிரம்ம கமல மலர் அழிவின் விளிம்பில் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow