அதெப்படி அவர்கள் மதுவை ஒழிப்பார்கள்.. வேடிக்கையாக இருக்கிறது.. - வாசன்

மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Sep 18, 2024 - 12:56
Sep 18, 2024 - 13:01
 0
அதெப்படி அவர்கள் மதுவை ஒழிப்பார்கள்.. வேடிக்கையாக இருக்கிறது.. - வாசன்
அதிகாரத்தில் உள்ளவர்களை வைத்து மாநாடு நடத்துவது வேடிக்கை - ஜி.கே.வாசன்

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், “பொய் வாக்குறுதிகளை வழங்கி திமுக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல் அரசாக திமுக உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தொடர்ந்து செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த வாசன், “திருமாவளவன் மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாகவும் புதிராக உள்ளது. தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து கூறுகையில், முதல்வரின் பயணம் ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். தெலுங்கானா உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் அதிக முதலீடுகளை ஈர்க்கும்போது, இங்கு ஏன் தொய்வு ஏற்படுகிறது.

தமிழகத்தின் 60 ஆண்டு திராவிட ஆட்சியில், கூட்டணியில் இருந்த பிறகும் கூட, ஆட்சியில் கூட்டணி வேண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தற்போது அனைவரும் நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது” என்றார்.

விஜய் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என கேட்ட கேள்விக்கு, அனைத்து கட்சிகளையும், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெரும் நபர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்.

தமிழகத்தில் மது கடைகளை படி படியாக மூடுவதற்கு இதுதான் சரியான தருணம். அரசு இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow