திருநெல்வேலியில் மகனுக்கு நிச்சயதார்த்தம், ஜப்பானில் திருமணம். அமெரிக்காவில் வசிக்கும் நடிகர் நெப்போலியன் அடடே பிளான்

Actor Napoleon Son Marriage At Japan : திருச்சிக்காரரான நடிகர் நெப்போலியன் தனது மகனுக்கு திருநெல்வேலியில் திருமண நிச்சயதார்த்தம் செய்தார். நவம்பரில் அவர்கள் திருமணம் ஜப்பானில் நடக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நெப்போலியன் மகனுக்காகவே இப்படி செய்கிறார்

Jul 15, 2024 - 17:48
Jul 27, 2024 - 18:19
 0
திருநெல்வேலியில் மகனுக்கு நிச்சயதார்த்தம், ஜப்பானில் திருமணம். அமெரிக்காவில் வசிக்கும் நடிகர் நெப்போலியன் அடடே பிளான்
Actor Napoleon Son Marriage At Japan


Actor Napoleon Son Marriage At Japan : திருச்சியில் பிறந்து வளர்ந்த நெப்போலியன், சினிமாவில் நடிகராகி புது நெல்லு, புது நாத்து, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே உட்பட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் குணசித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அரசியல் நுழைந்தவர் திமுக சார்பில் போட்டியிட்டு வில்லிவாக்கம் எம்எல்ஏ, பெரம்பலுார் மக்களவை தொகுதி எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். பின்னர் பாஜவில் இணைந்தார். இப்போது அரசியலில் அதிக ஆர்வமின்றி இருக்கிறார். நெப்போலியன் ஜெயசுதா தம்பதியினருக்கு  தனுஷ், குணால் என 2 மகன்கள். இதில் மூத்த மகன் தனுஷ், அரியவகை தசை சிதைவால் பாதிக்கப்பட அவருக்கு நெல்லை உட்பட பல இடங்களில் சிகிச்சை அளித்தார். பின்னர், மகன் வசதி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் டென்னசி மாகாணத்தில் செட்டில் ஆனவர், அங்கே ஜீவன் என்ற நிறுவனம் தொடங்கி பல தொழில்களை நடத்திவருகிறார்.இளையமகன் லாஸ்வேகாசில் படித்து வருகிறார். நெப்போலியனும்  தமிழகம் வந்து பல படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், திருநெல்வேலியை சேர்ந்த மூலக்கரைப்பட்டி அக் ஷயா திருமண நிச்சயதார்த்தம், ஜூலை 7ம் தேதி நெல்லையில் நடந்தது. அதில் நெப்போலியன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர், பயண பிரச்னை காரணமாக மணமகன் அமெரிக்காவில் இருந்தபடியே வீடியோ கால் மூலமாக நிச்சயதார்த்தில்  பங்கேற்றார். சரி, திருமணம் எங்கே நடக்கப்போகிறது. சென்னையிலா? திருச்சியிலா? நெல்லையிலா?அல்லது அமெரிக்காவிலா என்று விசாரித்தால், தனுஷ், அக்‌ஷயா திருமணம் ஜப்பான் நாட்டில், டோக்கியாவில் நவம்பர் 7ம் தேதி நடக்கப்போவதாக த கவல் வருகிறது. என்னது டோக்கியோவிலா? அங்கே ஏன் என்று விசாரித்தால் பல தகவல்கள் கிடைக்கின்றன.

டோக்கியோ திருமணம் குறித்து நெப்போலியன் தரப்பினர் கூறுகையி்ல் ‘‘ தசைபாதிப்பால் பாதிக்கப்பட்ட மகனின் எதிர்காலம், வசதிக்காகவே அவர் அமெரிக்கா சென்றார். அந்தவகை பாதிப்புள்ளவர்களுக்கு அந்த நாட்டில் பல வசதிகள் இருக்கின்றன. இந்தியாவி்ல் அது மிகக்குறைவு. இ்ப்போது நெப்போலியன் ஜீவன் குரூப் நிறுவனங்களை தனுஷ் கவனித்து வருகிறார். அவரின் திருமண நிச்சயதார்த்தம் நெல்லையில் நடந்துள்ளது. திருமணத்தை இந்தியாவில் நடத்த ஆசை இருந்தாலும், விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வர ஒரு நாள் வரை ஆகும். அந்த பயணம் தனுஷ்க்கு செட்டாகாது. கப்பலில் வந்தால் பல வாரங்கள் ஆகும். எனவே, குறைவான விமான பயணத்தில் செல்லும் படியான நாட்டில் திருமணம் நடந்த முடிவானது. அந்தவகையில் கடைசியில் ஜப்பான் டோக்கியா முடிவானது.

நெப்போலியன் வசிக்கும் அமெரிக்க மாகாணத்தில் இருந்து டோக்கியோவுக்கு 10 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அது, தனுசுக்கு வசதியானது. எனவே, ஜப்பானில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. மணமகள், மணமகன் வீட்டார், நெப்போலியன் நண்பர்கள் திருமணத்துக்காக டோக்கியோ செல்ல தயாராகி வருகிறார்கள். ஜப்பானில் திருமணம் நடக்க உள்ளதால் சமீபத்தில் சென்னையில் உள்ள ஜப்பான்நாட்டின் இந்திய துாதர் தி டக்காஹசி மியூன்னோவை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியிருக்கிறார். தொழி்ல் நிமித்தம் மியான்மர் உட்பட பல நாட்டு துாதர்களும் திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார். திருச்சிக்காரரான நெப்போலியன், திருநெல்வேலியில் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்த நிலையில் ஜப்பானில் திருமணம் நடத்த உள்ளது. அரசியல், சினிமா வட்டாரத்திலும் வியப்பாக பேசப்படுகிறது. தமிழ்சினிமாவில் இதுவரை ஜப்பானில் யாரும் திருமண நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. மகனின் மகிழ்ச்சி, வசதிக்காகவே அவர் அமெரிக்கா சென்றார். இப்போதும் அதற்காகவே ஜப்பானில் திருமணம்  என்கிறது நெப்போலியன் தரப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow