மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடி.. ஒரே நாளில் 6 அடி உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.12 அடியில் இருந்து 56.03 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 44,963 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Jul 19, 2024 - 15:06
Jul 20, 2024 - 10:21
 0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடி.. ஒரே நாளில் 6 அடி உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Mettur dam water level

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  55.12 அடியில் இருந்து 56.03 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் நீர்இருப்பு 21.81 டிஎம்சியாக உள்ளது.அணைக்கு 
நீர் வரத்து  வினாடிக்கு  40,018 கன அடியிலிருந்து 44,963 கன அடியாக அதிகரித்துள்ளது.குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது .இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை அடுத்து  கபினி ,கிருஷ்ணராஜா சாகர்,  ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 76,493 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு  காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
 இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில்   படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் நடைபாதை மேலே தண்ணீர் தொட்டு செல்கிறது.காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகத்தால் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை தொடர்ந்து 4வது நாளாக நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 75000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை 6 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை விரைவில் 100 அடியை எட்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow