அழுது நாடகம் போட்ட ராகுல்காந்தி.. 99 நம்பரை தாண்ட முடியாத ஒட்டுண்ணி.. மக்களவையில் விளாசிய மோடி

காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளின் ஒட்டுண்ணி போல மாறி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எதிர்கட்சியாக மட்டுமே இருப்பதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பின் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும் 99 சக்கரத்துக்கு உள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் என்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் மோடி.

Jul 2, 2024 - 18:02
 0
அழுது நாடகம் போட்ட ராகுல்காந்தி.. 99 நம்பரை தாண்ட முடியாத ஒட்டுண்ணி.. மக்களவையில் விளாசிய மோடி
Modi vs Ragul gandhi

மக்களவையில் இன்று எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே பேசிய மோடி காங்கிரஸ் கட்சியையும் ராகுல்காந்தியையும் கடுமையாக சாடி பேசினார். 

உலகிலேயே மிகப்பெரும் தேர்தலை இந்தியா நடத்தியுள்ளது. பொய்களை பரப்பி சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.தேர்தலில் தோற்ற எதிர்கட்சியினரின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.எதிர்கட்சியினருக்கு சகிப்புத்தன்மை இல்லை.

மதச்சார்பின்மைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர்.மனிதாபிமானத்தோடு மக்களுக்கு சேவை செய்யவே இங்கு வந்துள்ளோம்.ஊழலுக்கு எதிரான பாஜகவின் தொடர் நடவடிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மீண்டும் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.உலகளவில் இந்தியா மீதான நம்பிக்கையும் மரியாதையும் அதிகரித்துள்ளது

இந்திய முன்னேற்றத்திலேயே எங்களது கொள்கை - முடிவுகள் - நடவடிக்கைகள் அமைந்துள்ளன.நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் உழைத்து வருகிறோம். 

காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி ஏழைகள் வீடு பெற்றனர்.பாஜக ஆட்சிக்கு வந்தபின் நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டுள்ளது 
UPA ஆட்சியின்போது நாடு பல்வேறு ஊழல்களில் சிக்கியிருந்தது.2014ம் ஆண்டில் விரக்தியுடன் நாட்டு மக்கள் இருந்த நேரத்தில், மாற்றத்தின் சகாப்தத்தை பாஜக தொடங்கியது.

3ஆம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மும்மடங்கு பலத்துடன் செயல்படுவோம் என பிரதமர் பேச்சு.எதிர்கட்சியாக மட்டுமே இருப்பதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை.2014ஆம் ஆண்டுக்கு முன்புவரை எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படும் நிலை இருந்தது.தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

கேரளாவிலும் பாஜக தனது கணக்கைத் தொடங்கி விட்டது.ஒடிசா, ஆந்திராவில் காங்கிரஸ் ஒழிக்கப்பட்டுள்ளது.எதிர்கட்சியாக மட்டுமே இருப்பதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை.விவாதத்துக்கு தயாராக இல்லாததால், காங்கிரஸ் முழக்கங்களை மட்டுமே எழுப்புகின்றனர். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பின் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும்

99 சக்கரத்துக்கு உள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.காங்கிரசால் ஒருபோதும் 240 தொகுதிகளைத் தொட முடியாது.பாஜக தோற்றது போல் ஒரு தோற்றத்தை காங்கிரசை உருவாக்கியுள்ளது.தோல்வியடைவதில் உலக சாதனையை காங்கிரஸ் படைத்துள்ளது.நீங்கள் 100க்கு 99 வாங்கவில்லை - 543க்கு 99 வாங்கியுள்ளீர்கள் என்று காங்கிரசை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. 

அராஜகத்துடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் வடக்கில் சென்று தென்மாநிலங்கள் குறித்தும், தெற்கு சென்று வடமாநிலங்கள் குறித்தும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.இந்தியாவின் வடமாநிலங்களில், தென்மாநிலங்கள் குறித்து விஷம் போல் காங்கிரஸ் விமர்சிக்கிறது.அனுதாபத்தைப் பெற குழந்தை போல் ராகுல்காந்தி நேற்று அழுததை பார்த்தேன். அனுதாபத்தைப் பெற காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும் பிரதமர் கடும் விமர்சனம்.

பிற்படுத்தப்பட்டோரை அவமதித்தற்காக ராகுல்காந்தி மீது வழக்கு உள்ளது.சாவர்க்கரை அவமதித்ததாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஃபேல், எல்.ஐ.சி குறித்து ராகுல்காந்தி பொய் பேசினார்.ராகுல்காந்தி கூறிய பொய்கள், காங்கிரஸ் கட்சியை அழித்து விடும்.ராகுல்காந்தியின் பொய்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றும் பிரதமர் மோடி கடுமையாக பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow