World Breastfeeding Week 2024 : உலக தாய்ப்பால் வாரம்..தாய்ப்பால்.. உயிர்ப்பால்.. குழந்தைக்கு இத்தனை நன்மைகளா?

World Breastfeeding Week 2024 Importants in Tamil : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் அரசு பொது மருத்துவமனைகளில் உலக தாய்ப்பால் வாரம் இன்று முதல் 7ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Aug 1, 2024 - 15:54
Aug 2, 2024 - 10:19
 0
World Breastfeeding Week 2024 : உலக தாய்ப்பால் வாரம்..தாய்ப்பால்.. உயிர்ப்பால்.. குழந்தைக்கு இத்தனை நன்மைகளா?
World Breastfeeding Week 2024 Importants in Tamil

World Breastfeeding Week 2024 Importants in Tamil : தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடைபெற்று வருகிறது.தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள இடைவெளியை தவிர்ப்போம், தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிப்போம் என இந்த ஆண்டு உலக தாய்பால் கருத்துரு ஆக உருவாக்கப்பட்டுள்ளது.


பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள் முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.தாயின் பாலில் நிறைந்திருக்கும் உயிரணுக்கள், என்சைம்கள், ஆன்டிபாடிகள் மற்றும் ஹார்மோன்கள் இல்லாததால் ஃபார்முலா பால் இன்னும் திறமையற்றதாகவே உள்ளது. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான 'லிபோ புரோட்டீன்களின்' ஒரே ஆதாரம் தாய் மூலமாக மட்டுமே உள்ளது. மேலும் தாயின் பாலின் தரம் இயற்கையாகவே குழந்தையின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ பணியாளர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர்.

அதன் பின்னர் அமைச்சர் தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை  வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உலக தாய்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில் தமிழகத்தில் இன்று தொடங்கி 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளில் இந்த உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், குடும்ப உருப்பினர்கள் மற்றும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தாய்ப்பால் ஊட்டலை மேம்படுத்துதல், தாய்ப்பால் கொடுப்பதற்கான சூழலை உருவாக்குதல், தாய்ப்பால் ஊட்டலை எளிமைப்படுத்துதல் என தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

இது இளம் சிசு இறப்பு விகிதத்தை ஏறத்தாழ 20 சதவீதம் தடுக்கும் வல்லமை வாய்ந்தது தாய்ப்பால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளை 13 சதவிகிதம் தடுக்க உதவியாக இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சி ழூலம் தெரிவித்து இருக்கின்றனர்.. வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை 11 மடங்கு தாய்ப்பால் குறைக்கிறது. நிமோனியா மூலம் ஏற்படும் இறப்பிற்கான வாய்ப்புகளை 15 மடங்கு குறைக்க வல்லது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி, தொற்று நோய் என பலதுக்கும் தாய்ப்பால் நல்லது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி 2016 - 17 ஆண்டுகளில் பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கூட்டும் விகிதம் என்பது 54.7 ஆக இருந்தது, அதுவே 2020 - 21 ஆண்டுகளில்  60.2 ஆக உயர்ந்துள்ளது ( குழந்தை பிறந்து தாய்ப்பால் ஊட்டும் விகிதம்)2016 - 17 ஆம் ஆண்டுகளில் 6 மாதத்திற்கு தாய்ப்பால் ஊட்டும் சதவீதம் 48.3 ஆக இருந்தது தற்போது 55.1 ஆக உயர்ந்துள்ளது.

தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள இடைவெளியை தவிர்ப்போம், தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிப்போம் என இந்த ஆண்டு உலக தாய்பால் கருத்துரு ஆக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசின் தடுப்பூசி அட்டவணையின் படி குழந்தைகளுக்கு செலுத்தப்படும் 11 தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்துவதற்கான நடவடிக்கை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு,

அரசு மருத்துவமனைகள் சார்பில் தற்போது 11 தடுப்பூசிகளும் குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது மத்திய அரசிடம் இருந்து தனியார் மருத்துவமனைகளும் இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதன்படி தற்போது தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். சேவை மனப்பான்மையோடு இலவசமாக எந்த மருத்துவமனை இந்த தடுப்பூசிகளை செலுத்த முன் வருகிறதோ அந்த மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி விரைவில் 11 தடுப்பூசிகளும் இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கும் நடைமுறை தொடங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று இயங்கும் அனைத்து மருத்துவ கல்லூரிகளின் பணி புரியும் ஆசிரியர்கள் விபரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது அவ்வாறு வெளிப்படாமல் இருந்தால் அதனை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.. போலி மருத்துவர்கள் இருப்பதை கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பேருந்து நிலையங்களில் இருக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை உரிய வசதிகளுடன் பராமரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow