Seeman : பிசிறு.. உசுறு.. போலீஸ் மீது அவதூறு.. சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி வருண் குமார்

Trichy SP Varun Kumar Issue Notice to NTK Seeman : "நீ உக்காந்து ஆடியோ வெளியிடு. ஐ.பி.எஸ். படுச்சுட்டு எஸ்.பி, டி.சி ஆகுறதெல்லாம் எதுக்கு? சீமான் யார்ட்ட பேசுறான்? என்ன செய்றான்னு பாக்குறதா உன் வேலை? என்று சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 5, 2024 - 06:43
Aug 5, 2024 - 12:06
 0
Seeman : பிசிறு.. உசுறு.. போலீஸ் மீது அவதூறு.. சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி வருண் குமார்
Trichy SP Varun Kumar Issue Legal Notice to NTK Leader Seeman

Trichy SP Varun Kumar Issue Notice to NTK Seeman :  சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் அநாகரீகமாகப் பேசியதாகக் கூறி தனது வழக்கறிஞர் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான காளியம்மாவை சீமான் அநாகரீகமாகப் பேசியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதுமட்டும் அல்லாது, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த ஆடியோவை, நாம் தமிழர் கட்சியினர் பலரும் இதை சீமான் பேசவில்லை என்றும், இது ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி வதந்தியை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் கூறி மறுப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் காளியம்மாள் இதுகுறித்து எந்தவொரு மறுப்போ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான், காளியம்மாவை அநாகரீகமாகப் பேசியது பற்றி வெளியான ஆடியோவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "நீ உக்காந்து ஆடியோ வெளியிடு. ஐ.பி.எஸ். படுச்சுட்டு எஸ்.பி, டி.சி ஆகுறதெல்லாம் எதுக்கு? சீமான் யார்ட்ட பேசறான்? என்ன செய்றான்னு பாக்குறதா உன் வேலை?

திடீரென இவங்களுக்கு காளியம்மா மீது ஒரே பாசம். அவர் தான் மயிலாடுதுறைல போட்டியிட்டாரே? அப்போவே, காளியம்மா.. காளியம்மானு.. வேலை செஞ்சு ஜெயிக்க வெச்சுருக்க வேண்டியது தானே? நாங்கள் பிசுறுன்னு சொல்லுவோம்; அப்புறம் உசுறுன்னு சொல்லுவோம். அதுல உனக்கு என்ன பிரச்சனை? இது என் கட்சிப் பிரச்சனை" என்று தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் சீமான் பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிதரப்பட்டது. இந்த வீடியோவை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள எஸ்.பி வருண்குமார், இதுபோன்ற பேச்சுக்களை பொதுமக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து வருண்குமார் மற்றொரு பதிவில்,  சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் அநாகரீகமாகப் பேசியதாகக் கூறி தனது வழக்கறிஞர் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சீமானுக்கும் எஸ்.பி வருண்குமாருக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்படுகிறது. கடந்த மாதம் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் சாதிரீதியாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய சீமான்,  “ஒரு அதிகாரியை எஸ்.பியாக வைத்துள்ளீர்கள் வருண்ணு, அவரு எங்கள் ஊரை சேர்ந்தவர். தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் என யாரையுமே அவருக்கு பிடிக்கவில்லை. எங்கள் மீது பிறப்பு வெறுப்பு அவருக்கு உள்ளது. ஏற்கெனவே துரைமுருகனை சென்னைக்கு வர சொல்லி குண்டாஸில் போட்டது வருண் ஐபிஎஸ்தான்.

இப்போதும் சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வருவதும் வருண் ஐபிஎஸ்தான். இதையெல்லாம் மறந்துவிடுவோமா?. சர்வேசனும், நீங்களும் ஐபிஎஸ் படிக்கும்போது ஒரே பேட்ஜ் மெட்டாக இருந்தீர்கள். ரத்தீஷ் அவருடைய தம்பியாக உள்ளார். மேலிட அழுத்தம் என்று கூறுகிறீர்கள். எத்தனை நாட்களுக்கு நீங்கள் மேலிடத்தில் இருப்பீர்கள். தேவர், நாடார்,கோனார் என தொடர்ந்து வன்மத்துடன் உள்ளர். என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டார். 

அதற்கு வருண்குமார், ஐபிஎஸ்,  பாரதியாரின் கவிதையை சுட்டிக்காட்டி சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது வாழும் முறைமையடி பாப்பா என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow