ஊசலாடும் தங்கம் விலை.. இறங்கி ஏறும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? - நிபுணர்கள் அட்வைஸ்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மிகச்சிறந்த முதலீடு. திருமண காலத்தில் பெண்களுக்கு சீதனமாக தங்க நகைகளை கொடுப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் சவரன் 50 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது. ஏப்ரல் மே மாதங்களில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது. 200 ரூபாய் இறங்கினால் சவரனுக்கு 500 ரூபாய் ஏறுவதுமாக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.இந்த வாரம் திங்கள், செவ்வாயில் தங்கம் விலை குறைந்த நிலை அதற்கு அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து வருகிறது.
இன்று (ஆக.9) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,425-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.51,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரு.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையானது இப்போது குறைவது, உயர்வதுமாக இருந்தாலும் கூட காலப்போக்கில் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக அமெரிக்காவில் அந்நாட்டின் மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், தங்கம் விலை விறுவிறுவென ஏறிவிடும். அப்போது அது புதிய உச்சம் தொடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.5% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதனுடைய தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு கிராம் தங்கம் ரூ.10000ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?