தென்மேற்கு பருவமழை தீவிரம்..கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட்.. கேரளாவிற்கு ஆரஞ்ச் அலர்ட்

ஜூலை 19 ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Jul 16, 2024 - 10:06
Jul 16, 2024 - 14:01
 0
தென்மேற்கு பருவமழை தீவிரம்..கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட்.. கேரளாவிற்கு ஆரஞ்ச் அலர்ட்
Today weather report

தென்மேற்கு பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கனமழையும், கேரளாவில் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அதி கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 19 ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்பதால்  நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ,மண்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37செ.மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. இன்று மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அவலாஞ்சி இயற்கை சுற்றுச்சூழல் மையத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சிறுவாணி அணை அடிவார பகுதியில் 95 மில்லி மீட்டர் மழையும் அணைக்கட்டு பகுதியில் 135 மில்லி மீட்டர் மழையும்  பெய்துள்ளது. சிறுவாணி அணை நீர்மட்டும் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து  35.35 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 

இதனிடையே நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.21ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று கனமழையும், கேரளாவில் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அதி கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 19 ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow