பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மீது வழக்குப்பதிவு..மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக புகார்
பாடகர் மனோவின் மகன் மது போதையில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சிறுவர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை வளசரவாக்கத்தில் பாடகர் மனோவின் மகன் உட்பட அவருடைய நண்பர்கள் 5 பேர் சேர்ந்து மது போதையில் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தரப்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனோவின் மகன்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகர் 10 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன். 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவனும், கிருபாகரனும் நண்பர்கள். இன்று அதிகாலையில் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் ஏகேஆர் நகரில் உள்ள கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் கிருபாகரனும், சிறுவனும் பயிற்சி எடுத்தனர்.
பிறகு திரைப்பட பாடகர் மனோ வீடு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பாடகர் மனோவின் மகனும் அவரது நண்பர்கள் 4 பேரும் நின்று கொண்டிருந்தனர். நடந்து சென்ற கிருபாகரனும், சிறுவனையும் மதுபோதையில் இருந்த பாடகர் மனோ மகன் உள்பட 4 பேர் அழைத்தனர்.
பிறகு போதையில் தகராறு செய்து அடித்து உதைதத்தனர். இதில் கிருபாகரன், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் கிருபாகரனுக்கு 3 தையல் தலையில் போடப்பட்டது. சிறுவனுக்கு உள்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே கல்லூரி மாணவர், சிறுவனை தாக்கி காயப்படுத்திய பாடகர் மனோவின் 2 மகன்கள் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?