Sani Peyarchi Palan 2025 : மீன ராசிக்கு மாறப்போகும் சனி.. 2025ல் ஏழரை சனி யாருக்கு தொடங்குது? யாருக்கு முடியுது?

Sani Peyarchi Palan 2025 : சனி பகவான் 2025ஆம் ஆண்டு முதல் மீன ராசிக்கு மாறப்போகிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால் ஏழரை சனி யாருக்கு முடிகிறது? எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Jul 8, 2024 - 12:28
Aug 5, 2024 - 15:41
 0
Sani Peyarchi Palan 2025 : மீன ராசிக்கு மாறப்போகும் சனி.. 2025ல் ஏழரை சனி யாருக்கு தொடங்குது? யாருக்கு முடியுது?
Sani Peyarchi Palangal 2025 Prediction

Sani Peyarchi Palan 2025 : சனி பகவான் நவ கிரகங்களில் மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். சில மாதங்கள் வக்ர நிலையிலும் சில மாதங்கள் அதிசார நிலையிலும் செல்வார் சனிபகவான். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் வரை வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் அதன் பிறகு நேர்கதியில் பயணிப்பார். 

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.சனி பகவான் மீன ராசியில் தற்போது பயணம் செய்யும் ராகு உடன் கூட்டணி சேர்ந்து சில மாதங்கள் பயணம் செய்வார். சனிபகவானின் பார்வை 3ஆம் இடமான ரிஷபம், 7ஆம் இடமான கன்னி, 10ஆம் இடமான தனுசு ராசிகளின் மீது விழப்போகிறது.

இந்த சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலமாகும். கும்ப ராசிக்காரர்களுக்கு பாத சனி காலமாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.மகர ராசிக்காரர்களை ஏழரை ஆண்டு காலம் பாடாய் படுத்தி வந்த சனி பகவான் விட்டு விலகப்போகிறார். அதே போல கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி கடக ராசிக்காரர்களுக்கு முடிவுக்கு வருகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டம சனி தொடங்குகிறது. 

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஏழரை சனி காலம் என்பதால் பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனமும் நிதானமும் அவசியம். அகலக்கால் வைக்க வேண்டாம். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: அஷ்டம சனி காலம் என்பதால் சிம்ம ராசிக்காரர்கள் அவசரப்பட வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக அணுகுவது நல்லது.வாகன பயணங்களில் நிதானம் அவசியம். நெருப்பு, கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. வேலையில் இருப்பவர்கள் அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை நிதானம் அவசியம். 

கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த 5 ஆண்டு காலமாகவே ஏழரை சனி பாடாய் படுத்தி எடுக்கிறது.எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள்.பொருளாதார இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். இனி வரப்போகும் இரண்டரை ஆண்டு காலம் பாத சனி காலமாகும். சனிபகவான் விட்டு நீங்கும் முன்பாக நிறைய அள்ளி கொடுப்பீர்கள். படிப்பினைகளை கொடுத்த சனி பகவான் பண வருமானத்தை அள்ளித்தரப்போகிறார். 

மீனம்: சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் விரைய சனியாக உங்களை பாடாய் படுத்தி வருகிறார். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பமாகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இனி வரும் காலங்களில் சனிபகவான் நிறைய படிப்பினைகளை தரப்போகிறார். தொழில் வியாபாரத்தில் பண முதலீடு செய்பவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம் கவனமாக இருப்பது அவசியம். சனிக்கிழமை சனி ஓரை காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow